பாலியல் சீண்டலை 'மறக்குமா நெஞ்சம்'! காசை திருப்பி கொடுத்தாலும் AR ரகுமான் இசைநிகழ்ச்சி மீது குவியும் புகார்கள்
ஏ.ஆர்.ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AR Rahman
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்ட அந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும் அப்போதே விற்றுத்தீர்ந்தது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியதால், அந்த இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து அந்நிகழ்ச்சியை செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாக அறிவித்தனர்.
AR Rahman concert
இந்த முறை மழையே வந்தாலும் இசை நிகழ்ச்சியை கண்டிப்பாக நடத்துவோம் என அறிவித்திருந்த ஏ.ஆர்.ரகுமான், வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ரெயின் கோர்ட் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். மழைக்காக முன்கூட்டியே திட்டமிட்ட அவர், கூட்டத்தை பற்றியும், அவர்களுக்கான வசதிகளை பற்றியும் கவனிக்கத் தவறிவிட்டார். இதனால் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, ஏராளமானோருக்கு மறக்க முடியாத ஒரு ரணத்தை கொடுத்துவிட்டது.
AR Rahman music concert
25 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கிவிட்டு அதைவிட டபுள் மடங்கு டிக்கெட் விற்பனை செய்ததோடு மட்டுமின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால், அங்கு வந்த ஏராளமான குடும்பங்கள் சில கசப்பான அனுபவத்தை சந்தித்துள்ளனர். அங்கு அதிகளவில் கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிலர் மயங்கியும் விழுந்துள்ளனர். அந்த அளவுக்கு உயிர்பயத்தை காட்டி இருக்கிறது இந்நிகழ்ச்சி.
இதையும் படியுங்கள்... என் மகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அப்படி நடந்தது! இருந்தாலும் இதை பண்ணுங்க... குஷ்பு வைத்த கோரிக்கை!
AR rahman marakkuma nenjam concert
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பணத்தை திருப்பி கொடுத்து வரும் இந்த வேளையில், இந்நிகழ்ச்சியின் போது வெளியில் சொல்ல முடியாத சில அசம்பாவித சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் ஏராளமானோர் பாலியல் சீண்டலுக்கு ஆளானது படிப்படியாக தெரியவருகிறது. இதுகுறித்து பெண்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.
X post
அதில் ஒரு பெண் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டுள்ளதாவது : கூட்டத்தில் சிக்கிய பயத்தில், அங்கிருந்து வெளியேறுவதற்காக ஒருவரை அழைத்து அண்ணா எப்படி வெளியே செல்வது என கேட்டேன். என்னை குறுகுறுவென பார்த்த அந்த நபர், திடீரென என் மார்பில் கை வைத்தார். அப்போது செய்வதறியாது நான் உறைந்து போனேன். அங்கிருந்து என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இசையைக் கேட்க சென்ற எங்களுக்கு மறக்க முடியாத வலியை கொடுத்துவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று மேலும் சில பெண்களும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் குறித்து பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... அவர் செஞ்சதெல்லாம் மறந்துட்டீங்களா... அப்பாவை அவதூறாக பேசியவர்களுக்கு கதீஜா ரகுமான் கொடுத்த அல்டிமேட் பதிலடி