அவர் செஞ்சதெல்லாம் மறந்துட்டீங்களா... அப்பாவை அவதூறாக பேசியவர்களுக்கு கதீஜா ரகுமான் கொடுத்த அல்டிமேட் பதிலடி
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா தெரிவித்துள்ளார்.
AR Rahman Daughters
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாகவும், ரகுமான் குறித்து அவதூறாக பேசும் முன் அவர் மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்து பேசுங்கள் என ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டதால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல ஆயிரங்கள் கொடுத்து டிக்கெட் வாங்கியும் ரசிகர்கள் அரங்கினுள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
AR Rahman concert
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ஏ.ஆர்.ரகுமான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்தார். நிகழ்ச்சி ஏறாட்டாளர்களும் நடந்த சம்பவங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும், மன்னிப்பு கோருவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் குறித்து அவதூறாக பேசுவதற்கு முன் அவர் மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்து பேசுங்கள் என ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘மறக்குமா நெஞ்சம்’ குளறுபடிகள் வருத்தமளிக்கிறது... ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் வெளியிட்ட திடீர் அறிக்கை
AR Rahman
அதில், இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100% காரணம். ஆயினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்காக முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
khatija Rahman X post
ஏ.ஆர்.ரகுமான், 2015 பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு சென்னை மதுரை கோவை மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவியவர், திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர். அவர் குறித்து அவதூறாக பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ராக்கெட்ரியின் ரியல் ஹீரோ நம்பி நாராயணனுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த மாதவன் - வைரலாகும் வீடியோ