Tamilnadu School ReOpen: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்..!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக முன்கூட்டிய ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hb6h9qcs7nr9me48mpv39k09/school-leave-extended_300x171xt.jpg)
School Leave Extended
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் கடுமையான கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிபோகும். ஆனால், இந்த முறை மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளதாலும், கடுமையான வெப்பம் காரணமாகவும் பள்ளிகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
இருப்பினும் அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ எந்த தேதியும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது பள்ளிகள் திறப்பமு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.