- Home
- Gallery
- School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி மே 29-ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Karur Mariamman Festival
கரூர் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Karur District Collector Thangavel
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கரூர் மாவட்டம் கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 12ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகுதாம் கனமழை.. மீனவர்களுக்கும் எச்சரிக்கை!
Local Holiday
எனவே இந்நிகழ்வு நடைபெறவுள்ள 29ம் தேதி புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளான 29ம் தேதி செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 8ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.