ஒரு மகளா.. இயக்குனரா.. நெருக்கடிகளை சந்தித்த ஐஸ்வர்யா ! ரஜினி பொண்ணுக்கும் இதான் நிலைமை! விஷ்ணு விஷால் பேச்சு!
லால் சலாம் படத்தின், செய்தியாளர் சந்திப்பில்... கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால், இந்த படத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்த நெருக்கடிகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேடைக்கு வந்து நின்றதும்... லால்சலாம் படத்தை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அது என்னவோ தெரியவில்லை நான் நடிக்கும் படங்களை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது அதுவும் ஹிட் ஆகி விடுகிறது அந்த லக் எனக்கு உள்ளது. அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.
ரஜினி சாருடன், நடிக்க அனைவரும் ஏங்கும் சூழலில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ கதை தான். அது தான் ரஜினி சாரையும் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிக நேர்த்தியாக இந்த படத்தை எடுத்தார். ஒரு மகளாகவும் இயக்குனராகவும் ஐஷ்வர்யாக்கு நிறைய நெருக்கடிகள் இருந்தது. நடிகர் ரஜினிக்கு வைத்த முதல் ஷாட்டே அவர் நடந்து வருவது போல எடுத்த காட்சி தான். அதை செட்டில் இருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்தோம்.
முதல் முறையாக படம் ரீலீஸ் அன்னிக்கு நிம்மதியாக இருக்க போகிறேன். படத்துக்கு நிச்சயம் நல்ல ஒப்பனிங் இருக்க தான் போகிறது. அது நிச்சயம் எனக்காக இல்லை..ரஜினிக்காக தான். அதனால் படம் ரிலீஸ் அன்னிக்கு நிம்மதியாக தூங்க போகிறேன். சமீபத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது குறித்து ஒரு பதிவு போட்டேன். எனக்கு அரசியல் ஞானம் சுத்தமாக கிடையாது. என்னுடைய கருத்தை தான் சொன்னேன். அதற்காக என்னை வெறுக்கும் அளவுக்கு பல கண்டனங்கள் எனக்கு கொடுக்கப்பட்டது.
ஒரே நாளில் anti indian ஆக மாற்றப்பட்டேன். எங்கு பார்த்தாலும் வெறுப்புணர்வு தான் இருக்கு. அது குறித்து தான் இந்த படம் பேசவுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து நம்பிக்கை இருக்கும். அதை மதிக்க வேண்டும். ரஜினி பொண்ணாகவே இருந்தாலும் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். இங்கு இது தான் நிலைமை. வெற்றி மட்டும் தான் பேசும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். என தெரிவித்தார்.
50 கிளைகள்! 100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! சாதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்!