விஷ்ணுவை நம்பி ஏமார்ந்த பூர்ணிமா? செம்ம ட்விஸ்ட்... மாயாவை விட்டு பிரித்து இப்படி பண்ணிட்டாரே பிக்பாஸ்!
விஷ்ணு கேப்டன் ஆனதால்... கண்டிப்பாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூர்ணிமாவின் நினைப்புக்கு ஆப்பு வைத்துள்ளார் விஷ்ணு.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில்... 28 -ஆவது நாளில் 2 போட்டியாளர்களை வெளியே அனுப்பிய பிக்பாஸ், 5 வைல்ட் கார்டு எண்ட்ரியை உள்ளே கொண்டுவந்தார். இதை தொடர்ந்து, கடந்த வாரம்... அனன்யா மற்றும் பிராவோ வெளியே அனுப்பப்பட்டது மட்டும் இன்றி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆகி வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் உள்ளே வந்தனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hbxewr4a10xq9fkwj4r1pb16/jovika-saravanan-biggboss4102023m1_300x168xt.jpg)
புது வரவுகளால் பிக்பாஸ் வீட்டில் தற்போது பல குழப்பங்கள் அரங்கேறியுள்ள நிலையில்... நேற்றைய தினம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல் ஜோவிகா தான் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிதில், யாருக்கும் மரியாதை கொடுக்காமல் விளையாடி வந்த இவர்... கடந்த இரண்டு வாரங்களாக மரியாதை இல்லாமல் பேசி, கமலிடம் சிக்கி விட கூடாது என்கிற கான்ஷியஸுடன் விளையாடியதன் விளைவே இவர் வெளியேராகாரணம் என தெரிகிறது.
எனினும் ஜோவிகா சீக்ரெட் ரூமில் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில்... அவர் வெளியேறியது நேற்றையதினம் உறுதியானது. மாயா - பூர்ணிமா கேங்கில் இருந்து ஒருவர் வெளியேறியது அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தாலும் தங்களின் விளையாட்டில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.
இந்நிலையில் இந்தவாரம் கேப்டன்சி டாஸ்க்கிற்கு... அர்ச்சனா, விஷ்ணு, மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், இவர்களில் விஷ்ணு வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. விஷ்ணுவின் வெற்றி கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாக இருக்கும் என டான்ஸ் ஆடி அவரின் வெற்றியை கொண்டாடினர் மாயாவும் - பூரிமாவும்.
BB Tamil 7
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஷ்ணு பூர்ணிமாவை இந்த வாரம்... ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதாவது இந்த வாரம் அனன்யா, விஜய் வர்மா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மக்களுக்கு பிடிக்காத போட்டியாளர் என்கிற வாக்கியத்தை பிக்பாஸ் பிளான் போட்டு கேட்க, வேறு வழியே இல்லாமல் பூர்ணிமாவின் பெயரை கூறியுள்ளார் விஷ்ணு.
தினேஷ் கேப்டன்சியில் அவர் பிளான் போட்டு... ஜோடியாகவே திரிந்த, போட்டியாளர்களை பிரித்து போட்டார். அப்போது மணி - ரவீனா ஜோடி மட்டும் எஸ்கேப் ஆன நிலையில், இந்த முறை மாயா - பூர்ணிமாவை விஷ்ணு பிரித்து மட்டும் இன்றி, ரவீனா - மணியையும் பிரிந்து விட்டார். எனவே இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.