விஜய்க்கு போட்டியாக அரசியலா? விஷாலின் திடீர் அறிக்கை சொல்வதென்ன?
நடிகர் விஷால் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுபற்றி அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
Vishal, Vijay
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். பல்வேறு சமூக நலப்பணிகளையும் செய்துவரும் அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுபற்றி விளக்கம் அளித்து விஷாலே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.
Vishal Statement
அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
இதையும் படியுங்கள்... விஜய்யை தொடர்ந்து புது அரசியல் கட்சி தொடங்கும் விஷால்... அப்போ புரட்சி தளபதியும் சினிமாவை விட்டு விலகுகிறாரா?
Vishal about politics
அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் தல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நாள் கருதுகிறேன்.
is vishal enter politics
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என விஷால் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களை குழப்பும் விதமாக விஷால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை பார்த்த நெட்டிசன்கள் நீங்க வருவீங்களா? வரமாட்டீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 18 ஆண்டுகள் திரை வாழ்க்கை.. திமுக எம்.எல்.ஏவை திருமணம் செய்து செட்டிலான பழம்பெரும் நடிகை..