Vijay Vs Vishal: பக்கா ஸ்கெச்! நேரடியா மோதி மூக்கு உடைத்தது தான் மிச்சம்! விஜய் பாணியில் பதுங்கி பாயும் விஷால்
தளபதி விஜய்யை தொடர்ந்து... விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தளபதி விஜய், கடந்த வாரம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கையேடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தளபதி விஜய் கொடுத்த இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ரசிகர்கள் மீண்டு வராத நிலையில், நடிகர் விஷால் இன்று தன்னுடைய அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.
vishal
நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் பொதுச்செயலராக வெற்ற நிலையில்... அதே உத்வேகத்தில் தமிழக அரசியலிலும் கால் பாதிக்க விரும்பினார். ஆர் கே நகர் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றபோது, சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பு மனுவில் சில தவறுகள் இருப்பதாக சுட்டி காட்டி விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதற்க்கு காரணம் சில சூழ்ச்சிகள் தான் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஷால், தன்னை போல் சுயேச்சையாக போட்டியிட விரும்பும் இளைஞருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறினார்.
producer Vishal
மனதில் அரசியல் ஆசை உதித்ததால், தன்னுடைய ரசிகர் மன்றத்தை, 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்கிற பெயரில் மாற்றம் செய்து தொடர்ந்து பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று விஷால் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அறிவிப்புகள் வெளியானதும், விஜய்யை தொடர்ந்து விஷாலும் இன்று தன்னுடைய கட்சியின் பெயரை விஷால் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது.
Vishal Mark Antony
அந்தவகையில் விஷால் வெளியிட்ட அறிக்கையில்... சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.
அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
vishal
அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் தல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.
Vishal Quit Smoking
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நாள் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என தெரிதிவித்துள்ளார்.
vishal
இந்த அறிக்கை மூலம் தற்போதைக்கு விஷால் அரசியலில் கால் பதிக்க வில்லை என்றாலும் விரைவில் அரசியலில் கால் பதிப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.மேலும் எப்படி தளபதி விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் மூலம் ரசிகர்களை திரட்டி, ஒரு வலுவான இயக்கமாக மாறிய பின்னர்... பிடித்த பின்னர் அரசியலில் குறித்து அறிவித்தாரோ, அதே பாணியில் விஷாலும் தன்னுடைய அரசியல் நகர்வை கொண்டு செல்ல முயல்வதும் தெரிகிறது. இதற்கு காரணம் ஏற்கனவே ஆர் கே நகர் தேர்தலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு, மூக்கு உடைந்தது நின்றது போல் ஆகி விடக்கூடாது என்பதால்.. இந்த முறை சுதாரித்து செயல்படுகிறார் விஷால் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள்.