Vikranth: சினிமாவை விட்டே விலகி விடலாம் என முடிவில் இருந்தேன்! 17 வருட வலியை வெளிப்படுத்திய விக்ராந்த்!
லால் சலாம் படத்தில், இரண்டாவது நாயகனாக நடித்துள்ள.. விக்ராந்த். தன்னுடைய கேரியரில் இதுவரை ஒரு வெற்றி கூட கிடைக்காத ஆதங்கத்தை லால் சலாம் பிரஸ் மீட்டில் வெளிப்படுத்தினார்.
Vikranth
திரைத்துறைக்கு நான் வந்து 17 வருடம் ஆகி விட்டது. இதுவரை எதுவும் சரியாக அமையவில்லை. சினிமாவை விட்டே விலகிடலாம்னு நினைத்த போது தான், இந்த படத்துக்கான அழைப்பு வந்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnwv57n79kq0hdnpcry2hrg7/ee076c04-98a6-42a0-b72a-28582199a8ed_300x206xt.jpg)
இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். விஷ்ணுவிஷால் கடினமான உழைப்பாளி. சினிமாவில் நிச்சயம் அவர் உயர்ந்த இடத்துக்கு வருவார்.வரணும்.
நானும் விஷ்னுவும் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளோம், பல போராட்டங்களை சந்தித்துள்ளோம். இதற்கு முன்னரே ஒரு படம் இணைந்து நடிப்பதாக இருந்தது ஆனால் அது நடக்கவில்லை லால் சலாம் மூலம்.நிறைவேறியது மகிழ்ச்சி. படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாது
பல கேள்விகள் அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன். தன்னை சூப்பர் ஸ்டாராக அவர் நினைத்துக்கொண்டதே இல்லை. இன்னமும் கே.பாலச்சந்தர் சாரின் சிஷ்யராக தான் உணர்கிறார். நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி சாருக்கு நன்றி என பேசினார்.
50 கிளைகள்! 100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! சாதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்!