'சூது கவ்வும்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
'சூது கவ்வும்' திரைப்படத்தில், விஜய் சேதுபதி ஏற்று நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த காமெடி நடிகர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. அவர் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Soodhu Kavvum
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. பிளாக் காமெடி க்ரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படத்தில், பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா செட்டி, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சுமார் 35 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் கலெக்ஷனை குவித்தது. மேலும் சந்தோஷ் நாராயணனின் இசை, மிகப் பெரிய அளவில் இந்த படத்தில் பேசப்பட்டது.
Lakshmika Sajeevan Death: அதிர்ச்சி!! 24 வயது இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..!
vijay sethupathi
மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நவீன சமுதாயத்தை, முட்டாள்தனமான பேச்சு எவ்வாறு மூழ்கடிக்கிறது என்பது தான் இப்படத்தின் முக்கிய கருத்து. இதனை தற்போதைய இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, கேங் ஸ்டார் படமாக இயக்கி இருந்தார் நலன் குமாரசாமி. இப்படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த போதிலும், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
மேலும் தெலுங்கில் காடம் கெங் என்ற பெயரில் ரீமேக் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் உறுதி, பாகிஸ்தானி உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் நலன் குமார் சாமி இயக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், கூடிய விரைவில் அப்படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Simran: நீங்க இல்லனா சினிமா இல்லை! சிம்ரன் இதயத்தை நொறுங்க வைத்த மரணம்! கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு!
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்ற நடித்திருந்த தாஸ் என்கிற கதாபாத்திரத்தில், முதலில் ஒப்பந்தமானது பிரபல காமெடி நடிகர் வடிவேலு தான். ஆனால் இப்படத்தின் கதை அவருக்கு திருப்தி அளிக்காத நிலையில், ஒரு சில மாற்றங்களை கூறியதாக கூறப்படுகிறது... படக்குழு கதையில் மாற்றம் செய்ய மறுத்துவிட்ட நிலையில், விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு சென்றது. கதையை கேட்டதுமே நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலம் வெற்றி நாயகனாகவும் மாறினார்.