Simran: நீங்க இல்லனா சினிமா இல்லை! சிம்ரன் இதயத்தை நொறுங்க வைத்த மரணம்! கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு!
90-களில் பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், தன்னுடைய 25 வருட கால நண்பர் மரணம் குறித்து எமோஷ்னலாக கண்ணீருடன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
Simran
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சிம்ரன், ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மெட்ரோ சேனலில் சூப்பர் ஹிட் முக்காப்புலா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம், ஹிந்தி திரையுலகில் நுழைந்த இவர்... 1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியை சந்தித்தது.
Simran
இதை தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு 'தேரே மேரே சப்னே' என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி, சிம்ரனுக்கு மற்ற மொழி பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது. அந்த வகையில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, என அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.
Actress Simran
1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன், விஜய்க்கு ஜோடியாக மிகவும் கவர்ச்சிகரமான ஹீரோயினாக நடித்து அசத்தினார். இதைதொடந்து பூச்சூடவா, விஐபி, நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா, என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.
2000 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் சிம்ரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது, சில காதல் சர்ச்சைகளில் சிக்கிய சிம்ரன்... 2003 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் நண்பர் தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும், தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சிம்ரன், தற்போது மிகவும் எமோஷ்னல் பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிம்ரனின் 25 வருட நண்பரான காமராஜ் பற்றி தான் அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... "நம்ப முடியாத அதிர்ச்சி செய்தியாக உள்ளது. கடந்த 25 வருடமாக எனது வலது கையாக இருந்தவர் எனது நண்பர் காமராஜ். நம்பகத் தன்மை உடையவர். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் நடந்திருக்காது. அவரது குடும்பத்திற்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
சிம்ரனின் 25 வருட நண்பரான காமராஜ் பற்றி தான் அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... "நம்ப முடியாத அதிர்ச்சி செய்தியாக உள்ளது. கடந்த 25 வருடமாக எனது வலது கையாக இருந்தவர் எனது நண்பர் காமராஜ். நம்பகத் தன்மை உடையவர். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் நடந்திருக்காது. அவரது குடும்பத்திற்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D