வட சென்னையை சூழ்ந்த வெள்ளம்! பசியில் வாடிய மக்களுக்காக... களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்! குவியும் பாராட்டு!
மழை வெள்ளத்தால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பசியால் தவித்து வரும் மக்களுக்கு விஜய் ரசிகர்கள் தேடி சென்று உணவளித்து வருகிறார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலில் பாதிப்பால்.. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgx2drycknpffx1q7mpmf8xs/a14_300x223xt.jpg)
மேலும் விடிய விடிய பெய்த மழையால்... சென்னை நகரமே வெல்ல காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கீழ் தளத்தில் வசிக்கும் மக்கள் வீட்டின் உள்ளே மழை நீர் புகுந்ததால்... அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகர் விஷால், தன்னுடைய வீட்டின் உள்ளே மழை நீர் புகுந்து விட்டதாக நேற்று வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியது ஒருபுறம் என்றால்... இன்று காரப்பாக்கம் பகுதியில் வீட்டின் உள்ளே மழை நீர் புகுந்ததால், அந்த பகுதியில் வசித்து வந்த விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோர் பத்திரமாக தமிழக தீயணைப்பு துறையினரால் வெளியே கொண்டுவரப்பட்டனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல்... வீட்டின் உள்ளேயே பசி, பட்டினியோடு முடங்கி இருக்கும் மக்களுக்கு ஒரு பக்கம் அரசு உதவிகள் செய்து வந்தாலும்... மற்றொருபுறம் வீடு வீடாக தேடி சென்று உணவு வழங்கும் பணியில் அதிரடியாக இறங்கி உள்ளனர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள வடசென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.