Varalakshmi: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் பொங்கல் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! போட்டோஸ்..
நடிகையும், சரத்குமாரின் மூத்த மகளுமான வரலக்ஷ்மி இந்த ஆண்டு பட்டு புடவையில், குதூகலமாக பொங்கல் கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி. பாய்ஸ், காதல், சரோஜா போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்த போதும், தந்தை பேச்சை கேட்டு கொண்டு இதுபோன்ற வாய்ப்புகளை இழந்தார்.
பின்னர் தன்னுடைய தந்தையின் அனுமதியோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வரலட்சுமிக்கு எனோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
தமிழ் படங்களில், ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் கால் பதித்தார். அந்த வகையில், கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து மானிக்யா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக மாறியது.
பிற மொழிகளில் வரலட்சுமி நடித்தாலும், இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது... இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' திரைப்படம் தான்.
இந்த படத்தை தொடர்ந்து, ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், வில்லி, குணசித்ர வேடம் போன்றவற்றிலும் நடிக்க துவங்கினார். இதன் பலனாக.. விஜய், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் கைப்பற்றினார் வரலட்சுமி.
தென்னிந்திய திரையுலகில் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும், வரலட்சுமி... தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக பொங்கல் கொண்டாடியுள்ளார். அப்பா சரத்குமார், சித்தி ராதிகா, தங்கை என இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒட்டு மொத்தகுடும்பமே ஒன்று சேர்ந்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வரலட்சுமி, மிதமான மேக்காப்புடன்... ஆனியன் பிங்க் பட்டு புடவையில் தேவதை போல் ஜொலிக்கிறார். அக்காவுக்கு போட்டியாயாக வரலக்ஷ்மியின் தங்கையும் அதே நிற புடவையில் கலக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.