உண்மையா? உருட்டா.. சங்கூத வந்த சாமியார் மீது இறங்கிய விஜயகாந்த் ஆவி! பிரேமலதாவை பார்த்து சொன்ன வார்த்தை!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்து வந்த சாமியார், திடீரென கேப்டன் குரலில் பிரேமலதாவிடம் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90களில் ஆக்சன் அதிரடி நாயகனாக அறியப்பட்ட விஜயகாந்த், மாஸ் ஹீரோவாக இருக்கும்போதே ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய சொத்துக்களை விற்று அரசியல் கட்சியை துவங்கியவர். இவர் கட்சி துவங்கும் பொது பல பிரச்சனைகள் வந்த போதும், அதனை எதிர்த்து மிகவும் துணிச்சலாக அரசியலில் கால் பதித்தார்.
இவரது அரசியல் பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து முதல் முறையாக தேர்தலை சந்தித்த விஜயகாந்த், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டசபை சென்றதோடு மட்டுமின்றி, இவருடைய தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட பலர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெற்றி வாகை சூடினர். பின்னர் அதிமுக கட்சியில் இருந்து விலகிய விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டார்.
எப்படியும் முதல்வர் சீட்டை எட்டிப் பிடிப்பார் என மக்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், விஜயகாந்த் ஏற்பட்ட உடல் நலக்குறைவு இவரை சுமார் 8 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்தது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்ததால், விஜயகாந்த்தால்... முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை ஈடுபட முடியவில்லை. இவருக்கு பதிலாக இவருடைய மனைவி மற்றும் மச்சினன் சுதீஷ் ஆகியோர் அரசியல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
தற்போது விஜயகாந்தின் மூத்த மகன் ஆன விஜய பிரபாகரனும் அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார். மேலும் தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் டிசம்பர் 28 - ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் திரை உலக ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
அர்ச்சனா பணம் கொடுத்து தான் பிக்பாஸ் கோப்பையை வாங்கினாரா? விஜய் டிவியை சர்ச்சையில் சிக்க வைத்த மாயா?
தற்போது வரை இவருடைய மறைவில் இருந்து மீண்டு வராத ரசிகர்கள், இவருடைய பெயரில் நாள்தோறும் பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதேபோல் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள் பலர், தினம் தொடரும் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதோடு, விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Premalatha Vijayakanth
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது காசி விஸ்வநாதர் தன்னுடைய கனவில் தோன்றி, விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று சங்கு ஊத சொன்னதாக சாமியார் ஒருவரும் அங்கு வந்திருந்தார்.
காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை.. விரைவில் திருமணம்?
அவர் பிரேமலதாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, "விஜயகாந்த் எங்கேயும் போகவில்லை... உங்கள் மூத்த மகன் உருவில் உங்களுடன் தான் இருக்கிறார் என தெரிவித்தார்". பேசி கொண்டிருக்கும் போதே உடலை முறுக்கி... விஜயகாந்த் குரலில் பேசிய அந்த சாமியார். "என்ன பத்தி தெரியும் இல்ல, ஏழை மக்களை விட்டுட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்!! பிரேமா, நான் உன் இதயத்தில் தான் இருக்கிறேன் என பேசியது... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.