அர்ச்சனா பணம் கொடுத்து தான் பிக்பாஸ் கோப்பையை வாங்கினாரா? விஜய் டிவியை சர்ச்சையில் சிக்க வைத்த மாயா?
பிக்பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டது குறித்து மாயா போட்டுள்ள பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இதில் ரசிகர்களின் ஆதரவோடு அர்ச்சனா டைட்டில் வென்றார். இரண்டாவது இடத்தை மணி சந்திராவும், மூன்றாவது இடத்தை மாயாவும் வென்றனர்.
மக்களே பிக்பாஸ் வெற்றியாளர் அர்ச்சனா என்பதை ஏற்று கொண்டாலும், மாயாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கும் போதே மாயாவின் முகம் கோவத்தில் சிவந்து இருந்ததையும் பார்க்க முடிந்தது.
தற்போது வரை அர்ச்சனா டைட்டில் வின்னர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் மாயா போட்ட சில பதிவுகள்... சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதிலும் டைட்டிலை அர்ச்சனா பணம் கொடுத்து தான் வாங்கியுள்ளார் என மாயா கூறியுள்ளார்.
இதுகுறித்து போட்டுள்ள பதிவில், ’பணம் கொடுத்து நீங்கள் டைட்டில் பட்டத்தை வெல்லலாம், ஆனால் மக்களின் அன்பை வெல்ல முடியாது, அது எனக்கு கிடைத்துவிட்டது’ என்ற பதிவு செய்துள்ளார்.
அதே போல் மற்றொரு பதிவில், டியர் அர்ச்சனா வாழ்த்துக்கள். நீங்கள் டைட்டிலை வென்றதற்கு. "நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில பூ பூக்கும்... செடி வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு? நான் வந்து தண்ணி ஊற்றுகிறேன். சத்தியமாக சொல்கிறேன் நான் உன்னுடன் இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து.. இதைத்தொடர்ந்து "நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன். இவ்விடமும் அவ்விதமே..! நான் எப்போதும் உங்களுடைய நட்புக்கு ஏற்றவளாக இருப்பேன். நீங்கள் என்னை சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி, என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி, ஒரு தோழியாக இருந்து உன் உயிர் காப்பேன் என கூறி, பூர்ணிமா, ஜோதிகா, விக்ரம், அக்ஷயா, நிக்ச,ன் விஜய் வர்மா, விச்சு, அனன்யா, ஆகியோரை டேக் செய்துள்ளார்.
BB Tamil 7
பிக்பாஸ் ரசிகர்கள் சிலர்... மாயா டைட்டில் தன்னை விட்டு சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம் என்பதை கூட மறந்து அர்ச்சனா மீது வன்மத்தை கக்கி வருவதாக கூறி வருகிறார்கள். அதே போல் அர்ச்சனா உண்மையிலேயே மக்கள் மனதை வென்று தான் டைட்டில் வென்றதாக பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.