மனைவி கூட போர் அடிச்சிடுச்சு.. விவாகரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தேன்! மிஷ்கின் ஓப்பன் டாக்!
இயக்குனர் மிஸ்கின் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய திருமண வாழ்க்கை, பிரிவு, காதல், போன்ற பலருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தின் மூலம், கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், மிக குறுகிய நாட்களில்... தன்னுடைய தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். அதே போல் 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் மிஷ்கின் 'நந்தலாலா' என்கிற படத்தை இயக்கிய மிஸ்கின், அந்த படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான சில விருதுகளை பெற்றார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hapz2y3dkvyse8sj6a642kty/mysskin-and-vijay_300x171xt.jpg)
Mysskin and Vijay
மேலும் அடுத்தடுத்து இவர் இயக்கிய யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ, போன்ற வெற்றி படங்களை இயக்கினார். ஒரு வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் மிஷ்கின் சமீப காலமாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், முன்னணி இயக்குனர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
Director Mysskin
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சங்கீதா எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிஷ்கின் முதல் முறையாக தன்னுடைய மனைவியிடம் இருந்து பிரிந்தது குறித்து பேசியுள்ளார். சங்கீதா காதல் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, மிஸ்கின், என் வாழ்க்கையில் பல காதல் இருக்கிறது. 12 வயதில் ஒரு காதல், 16 வயதில் ஒரு காதல், ஸ்கூல் முடித்தப்பின் காதல், கல்லூரியில் காதல், என் மனைவியை சந்திக்கும் போது காதல். என பலதரப்பட்ட காதல் குறித்து பேசியுள்ளார்.
Director Mysskin
மனைவியை சந்திக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை திருமணத்திற்கு தடையாக அமைந்தது. பின் எனக்காக வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டபோது பல கஷ்டங்களுக்கு ஆளானோம். ஒரு காலக்கட்டத்தில் மனைவிக்கு எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என் மனைவி ரொம்ப நல்லவங்க. , இந்த இடத்தில் அவர்களை பற்றி பேசணும். நான் ஏன் அவரை பிரிந்தேன் என்று எனக்கே தெரியாது. ஒரு துளி கூட எனக்கு அவர் துரோகம் செய்யவில்லை, ஒரு கெட்டது செய்யவில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு போர் அடித்துவிட்டது. சினிமா பக்கம் சென்றதால் அவரை மிஸ் செய்துவிட்டேன். ஒருவேலை சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் மனைவியுடன் இருந்து இருப்பேன் என உருக்கமாக பேசியுள்ளார். ஒருவித சலிப்பு ஏற்பட்டு விட்டதால், ஒதுங்கி விடலாம் என தோன்றிவிட்டது அதனால் பிரிந்து விட்டோம் என கூறியுள்ளார்.
பின்னர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் மற்றொரு பெண் மேல் காதல் வந்ததாகவும், அவருடன் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்த மிஷ்கின் அவரிடம் இருந்தும் ஒரு கட்டத்தில் பிரிந்தார். இப்போது இவரின் உலகம் என்றால் அவர் இவரின் மகள் தானாம். அவருக்கு 18 வயது ஆகி விட்டதாகவும் அவர் தான் என்னுடைய மனைவிக்கும், எனக்கும் இடையே பாலமாக இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல பிரபலங்களினின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!