விஜயகாந்த் மரணச் செய்தி கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார் வடிவேலு - அரசியல்வாதி சொன்ன அதிர்ச்சி தகவல்
விஜயகாந்தின் மறைவுக்கு வடிவேலு வராவிட்டாலும் அவர் மனம்விட்டு அழுத்ததாகவும் ஒருநாள் முழுக்க சாப்பிடவில்லை என்றும் அவரின் நண்பர் கூறி இருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் அலைகடலென திரண்டு வந்ததால் சென்னையே ஸ்தம்பித்து போனது. இது ஒருபுறம் இருக்க விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்த வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hjw856qdbeapkycsneknmadq/vadivelu_300x171xt.jpg)
அதிலும் குறிப்பாக வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது பற்றி பலரும் விமர்சித்து வந்தனர். அஞ்சலி செலுத்த வராவிட்டாலும் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு விஜயகாந்த் மீது வடிவேலு வன்மத்தில் இருப்பதாக நெட்டிசன்களும் சாடி வந்தனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டதும் வடிவேலு என்ன செய்தார் என்பது பற்றி அவரின் நண்பரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான மாலின் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்... அயலானை விட கம்மி ரேட்டுக்கு விலைபோன கேப்டன் மில்லர்..?
இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : வடிவேலு வரல... வரலனு சொல்லி அவரை கார்னர் செய்கின்றனர். ஆனால் உண்மையில் விஜயகாந்த் செய்த உதவிகளையெல்லாம் சொல்லி வடிவேலு எந்த அளவு வருத்தப்பட்டார் என்பது அவருடன் நெருங்கி பழகிய எங்களைப்போன்றவர்களுக்கு தான் தெரியும். வடிவேலுவின் தாய், தம்பி ஆகியோரின் மறைவுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது வந்தார்களா என கேள்வி எழுப்பிய மாலின், 10 வருஷம் நடிக்க முடியாமல் இருந்தபோது யாரும் கண்டுகொள்ளாததால் வடிவேலு மனம் வெறுத்து போனதாக மாலின் கூறினார்.
எல்லாரும் வடிவேலு சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜயகாந்த் மறைவுச் செய்தி கேட்டு கண்ணீர்விட்டு அழுதார். ஒருநாள் முழுவதும் அவர் சாப்பிடவில்லை. நேரில் சென்றால் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்பதால் தான் அவர் செல்லவில்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என கூறிய மாலின், வடிவேலு வரவில்லை என்பதை பெரிதுபடுத்துபவர்கள், விஜயகாந்துக்கு துரோகம் செய்து ஓடிய எம்.எல்.ஏ.க்கள் பற்றி ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்... Keerthi Pandian: பிக்பாஸ் மாயாவுடன்... ஸ்டேஜ் பர்ஃபாம்மென்சில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்! வைரலாகும் வீடியோ..