அரசியல் தலைவர்கள்.. இணைத்து கிசுகிசுக்கப்பட்ட 3 கோலிவுட் நாயகிகள் - டாப்பில் இருந்தும் நயனை துரத்திய Rumors!
Kollywood Heroines : பிற மொழி படங்களை போல அல்லாமல் அரசியலும், சினிமாவும் ஒட்டி உறவாடும் காதலர்கள் என்றே கூறலாம். நடிப்பில் இருந்து அரசியலுக்கு சென்றவர்களின் பட்டியல் இங்கு மிகப்பெரியது.
Sukanya
அதே போல தமிழ் சினிமாவில் பயணித்து வரும் பல நடிகைகள் அரசியல் தலைவர்களோடு அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் தமிழ் நடிகை சுகன்யா சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். இவர் இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்து புகழ்பெற்ற ஒரு மாபெரும் நடிகை. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் தனது பயணத்தை இவர் துவங்கினார்.
குறைந்த அளவிலான படங்களை தான் இந்த 34 வருட பயணத்தில் நடித்திருக்கிறார் என்று போதும் கூட சுகன்யா ஒரு அண்டர்ரேட்டட் நடிகை என்றால் அது மிகையல்ல. கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை மணந்த சுகன்யா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஆண்டே அவரை விவாகரத்தும் செய்தார். அன்று முதல் இன்று வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனித்து தான் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் ஒரு அரசியல் பிரபலத்துடன் அவர் தொடர்பில் உள்ளதாக பல கிசுகிசுக்கள் இன்றும் வெளியாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
Kutty Radhika
குட்டி ராதிகா, தமிழ் மொழியில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "இயற்கை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர். ஆனால் அதற்கு முன்னதாகவே பல கன்னட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் மிக மிக குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கிறார் என்ற போதும் கன்னட மொழியில் இவர் ஒரு மிகப்பெரிய நடிகை ஆவார். இன்றளவும் இவர் கன்னட மொழியில் நடித்தும் வருகின்றார்.
கடந்த 2000வது ஆண்டு ரத்னம் குமார் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்தார். இந்த சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர் குமாரசாமி உடன் இவர் தொடர்பில் இருக்கிறார் என்று சில தகவல்கள் வெளியான நிலையில், 2006 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் குட்டி ராதிகா. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அவரையும் செய்து விட்டார் குட்டி ராதிகா.
Nayanthara
தமிழ் சினிமாவில் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்து பெரிய பின்புலம் இல்லாமல் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல தொழில்களுக்கு அதிபராகவும் திகழ்ந்து வருபவர் தான் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு முன்பு சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய நடிகர்களோடு இவர் தொடர்ச்சியாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவருடைய திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நயன்தாரா அவர்களும் காதல் வயப்பட்டுள்ளதாக பல கிசுகிசுக்கள் வெளியானது. உச்சகட்ட நடிகையாக நயன்தாரா திகழ்ந்து வந்த பொழுதும் அவரை இந்த புரளி துரத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.