டெய்லி குடிச்சுட்டு வந்து அடிப்பார்... ஷகீலா செய்த கொடுமைகளை லிஸ்ட் போட்டு சொன்ன வளர்ப்பு மகள் ஷீத்தல்
ஷகீலாவின் வளர்ப்பு மகளான ஷீத்தல், ஷகீலா தினமும் குடித்துவிட்டு போதையில் தன்னை அடிப்பார் என்று பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
sheethal, shakeela
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஷகீலா. ஆரம்ப காலகட்டத்தில் மலையாள படங்களில் ஆபாசமாக நடித்து புகழின் உச்சிக்கு சென்ற ஷகீலா, பின்னர் அங்கு அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டுக்கு வந்து செட்டில் ஆனார். இங்கு தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்ததை அடுத்து குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சி நடிகை ஷகீலாவின் இமேஜை டோட்டலாக மாற்றியது. அதுவரை ஆபாச நடிகையாகவே அறியப்பட்ட ஷகீலா, அந்நிகழ்ச்சியில் தன்னுடைய இயல்பான குணத்தையையும், சமையல் திறமையையும் வெளிப்படுத்தி ஆபாச நடிகை என்கிற பிம்பத்தை மாற்றி அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றார். அதுமட்டுமின்றி பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட திருநங்கைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார் ஷகீலா.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01he5j4mj0gqsxrge8y2h83ffk/shakeela1_300x216xt.jpg)
அப்படி ஷகீலாவிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்து வந்தவர் தான் ஷீத்தல். இவருக்கும் ஷகீலாவுக்கும் இடையே அண்மையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஷீத்தல், அவருடைய தாய் சசி மற்றும் அவருடைய சகோதரி ஜமீலா ஆகியோர் தன்னை தாக்கிவிட்டதாக கூறி நடிகை ஷகீலா தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீஸில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஷகீலா குற்றம்சாட்டிய ஷீத்தல் செய்தியாளர்களை சந்தித்து என்ன பிரச்சனை என்பதை கூறினார். அப்போது, தனக்கு ஷகீலாவுக்கும் சில நாட்களாகவே பிரச்சனை இருந்தது உண்மை தான். இதனால் எங்கள் இருவருக்கு இடையேயும் நிறைய வாக்குவாதமும் ஏற்பட்டது. அவருக்கு நான் என் அம்மாவிடம் சென்றுவிட்டது பிடிக்கவில்லை. அவர் என்னுடைய அம்மாவை தப்பு தப்பாக பேசி இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... Shakeela Love: தன்னை விட வயதில் குறைவான... அஜித் மச்சினன் ரிஷியுடன் ஷகீலாவுக்கு மலர்ந்த காதல்! இது எப்போ?
பின்னர் ஷகீலா அவருடைய நண்பர் தங்கம் என்பவரின் மூலம் என்னை வீட்டுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் வளர்த்தவர் என்கிற முறையில் அங்கு சென்றேன். ஆனால் அவரிடம் பேசாமலேயே இருந்து வந்தேன். மறுபடியும் அவர் என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் என்னையும் மிகவும் அசிங்கமாக பேசினார். இதனால் நான் கோபமடைந்து, நீங்கள் மட்டும் சரியாக இருக்கிறீர்களா என கேட்டதும் அவர் என்னை அடித்துவிட்டார். பதிலுக்கு நானும் அடித்தேன்.
பின் ஷகீலாவின் வழக்கறிஞர் செளந்தர்யா என்னிடம் வந்து ஷகீலாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். நான் முடியாது என்று சொன்னதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கையில் கிடைத்த ஒரு பொருளை எடுத்து என்னை அடித்தார் செளந்தர்யா. அதனால் தான் நானும் அடித்தேன். அப்போது அவர் என் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்ததால் என் சகோதரியும் நானும் சேர்ந்து அவரை தடுத்தோம். இவற்றையெல்லாம் ஷகீலா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் அடித்த காரணத்தால் தான் நாங்களும் அடித்தோமே தவிர வேண்டுமென்றே யாரையும் நாங்கள் தாக்கவில்லை. அவர்கள் அனைவரும் குடி போதையில் இருந்ததால் மிகவும் தவறாக பேசினார்கள். பின்னர் மன்னிப்பு கேட்க சொல்லி ஆண்களை அனுப்பி மிரட்டினார்கள். போலீசிடம் பொய் புகார் கொடுப்போம் என்று சொன்னார்கள். பின்னர் போலீசிடம் சென்றபோது அவர்கள் இருவரும் சுமூகமாக பேசி பிரச்சனையை முடித்துக்கொள்ளுமாரு அறிவுறுத்தினார்கள். நாங்களும் மன்னிப்பு கேட்க சம்மதித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்ததால் தற்போது நாங்களும் புகார் கொடுத்துள்ளோம். ஷகீலாவுக்கு தினசரி குடிக்கும் பழக்கம் உண்டு. குடித்துவிட்டு போதையில் என்னை அடிப்பார் என்றும் ஷீத்தல் அப்போது கூறினார்.
இதையும் படியுங்கள்... மகளை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு.. ஷகீலா வீட்டில் பார்ட்டி கொண்டாடிய வனிதா - வைரலாகும் போட்டோஸ்