Sani Peyarchi 2022: ஜூலை 12ம் தேதி சனியின் ராசி மாற்றம்...ஏழரை நாட்டு சனியில் பிடியில் விடுதலை பெறும் ராசிகள்
Sani Peyarchi Palangal 2022: இந்த 2022 வருடத்தில் இரண்டாவது முறையாகப் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். ஜூலை 12ம் தேதி சனி பகவான் ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
shani
நீதியின் கடவுளான சனியின் இந்த ராசி மாற்றத்தால், சிலருக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்தும், சிலருக்கு சனி தசையில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.
shani rashi
தற்போது, சனி பகவான் மீண்டும் ஜூலை 12ம் தேதி மீண்டும் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த ஆண்டின் இரண்டாவது முறையாக, சனி பகவான் ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைகிறார்.இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார். முன்னதாக ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் தனது ராசியை மாறினார்.
shani
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், சனியின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Pisces
மீனம்:
ஜூலை 12-ம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி, மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். மீன ராசிக்காரர்கள் ஜனவரி 17, 2023 வரை இதிலிருந்து விடுபடுவார்கள். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.
Astro Tips
கடகம்:
ஜூலை 12-ம் தேதி சனி பெயர்ந்தவுடன் கடகம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
Aquarius to Scorpio
விருச்சிகம்:
ஜூலை 12-ம் தேதி சனி பெயர்ந்தவுடன் கடகம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். மனதில் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை கை விடுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். ஆரோக்கியம் மேம்படும்.