Anbe Vaa Serial: சிறப்பான சம்பவம் செய்த சன் டிவி 'அன்பே வா சீரியல்' குழு! இது தான் விஷயமா.? குவியும் வாழ்த்து!
2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியல், 1000 எபிசோடுகளை எட்டி சாதனை படைத்துள்ளதால், இந்த மகிழ்ச்சியை சீரியல் குழு கொண்டாடி வருகிறது.
2020, ஆம் ஆண்டு சன் டிவியில் நவம்பர் மாதம் துவங்க பட்ட சீரியல் 'அன்பே வா'. இந்த சீரியலில் விராட், வருண் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார், டெல்னா டேவிஸ் பூமிகா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வருண் பூமிகாவை உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொள்ளும் நிலையில்... வருணின் அம்மா பூமிகாவை, வருணுடன் வாழ விடாமல் சதி செய்கிறார். மாமியாரின் மனதை வென்று வாழ்க்கையில் ஒன்று சேரும் பூமிகா... இந்த சீரியலில் இருந்து விலக முடிவு செய்த போது... ஒரேயடியாக இவரது கதாபாத்திரத்தையே தூக்கும் விதத்தில், பூமிகா கதாபாத்திரத்தையே சாகடித்து விட்டனர் சீரியல் குழுவினர்.
தற்போது இந்த சீரியலில், பல புதிய கதாபாத்திரங்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக வருண் கண்மணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது போல் காட்டப்படுகிறது. வருணின் அம்மா மனம் மாறி மகன் - மருமகளுக்கு ஆதரவாக இருந்தாலும்... நாத்தனார் கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக நடித்து வரும் மஹாலட்சுமி பிளான் போட்டு பூமிகாவை கொன்றது மட்டும் இன்றி, கண்மணியையும் வீட்டை விட்டு விரட்ட முயன்று வருகிறார்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்... தற்போது வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை சீரியல் குழுவினர் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.