விவாகரத்து பேப்பரில் கையெழுத்து கேட்ட சௌந்தரபாண்டி.. மற்றொரு பக்கம் ஷாக் கொடுத்த பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial Update : சின்னத்திரையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று கிளீனிக் வைக்க பணம் கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Poovilangu mohan
அதாவது, சௌந்தரபாண்டி பரணி சண்முகத்தை வேண்டாம் என சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து விட்டதாக நினைத்து பணம் தருவதாக வாக்கு கொடுக்கிறார், அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் லாயர் ஒருவர் கையில் விவாகரத்து பேப்பருடன் வீட்டிற்கு வர, சௌந்தரபாண்டி அந்த பேப்பரில் கையெழுத்து கேட்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடையும் பாக்கியம், கல்யாணம் என்பது ஒரு முறை தான், இப்படி பொண்ணோட வாழ்க்கையை நீங்களே கெடுக்க பார்க்கறீங்களே என்று அந்த விவாகரத்து பேப்பரை கிழித்து போட, பரணி இது என்னோட வாழ்க்கை, எப்போ என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்கிறார்.
மலைவாழ் மக்களின் எதார்த்த வாழ்க்கையை சொல்லும் படம்.. பிக் பாஸ் தர்ஷனின் "நாடு" - வென்றதா? வீழ்ந்ததா?
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgjbf4chgf4dpm6e7k66vxrw/nithya-ram_300x168xt.jpg)
Nithya Ram
உங்க பணம் எனக்கு வேண்டாம். எனக்கு கிளினிக் எப்படி ஓபன் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். இதனால் கோபமடையும் சௌந்தரபாண்டி, நீ இருக்கிற வரைக்கும் எதுவும் நடக்காது என பாக்கியத்தை ரூமுக்குள் தள்ளி கதவை பூட்டி வைக்கிறார். இங்கே ஷண்முகம் வீட்டில் பரணியை காணவில்லை என எல்லாரும் பதற்றமடைகின்றனர்.
வைகுண்டம் வீட்டில் இருக்கும் பெண்களை திட்டி தீர்க்கிறார். இந்த நேரத்தில் பரணி வீட்டிற்கு வந்து அப்பா விவாகரத்து பேப்பரில் கையெழுத்து கேட்ட விஷயத்தையும், போட மாட்டேன் என சொல்லிவிட்டு வந்த விஷயத்தையும் சொல்ல தங்கைகள் சந்தோசப்படுகின்றனர்.
Anna Serial
அப்படினா அண்ணா கூட வாழ முடிவு பண்ணிடீங்களா என்று கேட்க எனக்கு உங்க அண்ணனும் வேண்டாம், அவங்களும் வேண்டாம் என ஷாக் கொடுக்கிறாள். இங்கே பாக்கியம் சிவபாலனிடம் கதவை திறக்க சொல்ல, அவன் கடப்பாரையை எடுத்து வந்து கதவை உடைக்க போக, சௌந்தரபாண்டி இது என் வீடு, இங்க என்ன நடக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான் என அவனை தடுத்து நிறுத்தி துரத்தி விடுகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.