எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் Networth..! வைரலாகும் தகவல்!
இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த, இயக்குனரும் - நடிகருமான மாரிமுத்துவின் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Ethirneechal Marimuthu
திரை உலகில் சாதிக்க துடிக்கும் அனைவருமே எடுத்த எடுப்பில் தங்களின் வெற்றி இலக்கை அடைந்து விடுவதில்லை. அப்படி.. திரையுலகில் படாத படு பட்டு தன்னுடைய 50 வயது மேல் வெற்றி பாதையை தேர்வு செய்து ஒரு குணச்சித்திர நடிகராக தன்னுடைய கேரியரை நகர்த்தி சென்றவர் தான் மாரிமுத்து.
G Marimuthu passed away
பல கடுமையான சூழல்களிலும் 33 வருட விடாமுயற்சி தான் இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றால் அது மிகையல்ல. சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் தனக்கென தனி அடையாளத்தை பதிவு செய்துள்ள மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரணனாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆரம்பத்தில் மிகவும் குறைவான சம்பளத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக தன்னுடைய பணியை துவங்கினார்.
கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
பின்னர் பிரபல இயக்குனர்களான மணிரத்தினம், வசந்த், எஸ் ஜே சூர்யா, சீமான், போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, இவரின் சம்பளம் 1500 ரூபாய் தான். இந்த சம்பளம் பெரும் போது தான் தன்னுடைய மனைவியை திருமணம் செய்து கொண்டார். கஷ்டம் - நஷ்டம் என எது வந்தாலும் அனைத்தையும் சமாளித்து குடும்பத்தை நேர்த்தியாக நடத்தினார் மலர்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மாரிமுத்துவின் ஆரம்ப கால கஷ்டத்தை அறிந்து அவரின் மகன் படிப்பு செலவுக்கு உதவியது கூட அஜித் தான் என்பதை மாரிமுத்து, பேட்டி ஒன்றியிலும் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!
G Marimuthu passed away
ஆனால் மரிமுத்து வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றால் அது எதிர்நீச்சல் தொடர் தான்... திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இவரின் கதாபாத்திரம் பிரபலமானது. இந்த சீரியல் கொடுத்த பிரபலம் ஜெயிலர், இந்தியன் 2 போன்ற படங்களிலும் நடித்தார். சினிமாவில் நடிக்க சில லட்சங்களை சம்பளமாக பெரும் குணசேகரன், எதிர்நீச்சல் சீரியலில் முதலில் 20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். ஆனால் தற்போது 40 முதல் 50 ஆயிரம் வரை 1 நாளைக்கு சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
Marimuthu networth:
எதிர்நீச்சல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாகவும் இவர் தான் உள்ளார். தற்போது இவருடைய networth குறித்து வெளியாகியுள்ள தகவலில், "மாரிமுத்து தன்னுடைய கனவு இல்லத்தை சில கோடி செலவு செய்து வாங்கியுள்ளார். இதை தவிர சில லட்சம் மட்டுமே இவரின் பேங்க் பேலன்சில் உள்ளதாம். கார் ஒன்று சொந்தமாக வைத்துள்ள இவர், இனிமேல் தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு தேவையான நகை மற்றும் பிற சொத்துக்கள் சேர்த்து வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்க்கு முன்பாகவே இவர் உயிரிழந்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கை தான் மாரிமுத்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது. இப்படி வெளியாகியுள்ள தகவல் குறித்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்து மரணத்திற்கு ராதிகா முதல் வைரமுத்து வரை கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!