கணவன்-மனைவிக்குள் எவ்வளவு சண்டை வந்தாலும் உறவு வலுவாக வைக்க சில டிப்ஸ்!
கணவன்-மனைவிக்கு இடையே சண்டை வந்தாலும், உறவே வலுவாக வைத்திருக்க சில குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பரஸ்பர இணக்கம்: கணவன் மனைவி இடையே இணக்கம் மிகவும் முக்கியமானது. எதைப் பற்றியும் வாக்குவாதம் செய்தாலும் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. சிறிய விஷயங்களில் கூட நீங்கள் அதனுடன் தான் செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஈகோ வேண்டாம்: கணவன் மனைவி இடையே ஈகோ மனப்பான்மையை வளர்க்கக்கூடாது. குடும்பத்தில் இருவரும் சமம். இந்த சமநிலை மனப்பான்மை மகிழ்ச்சியான குடும்பத்தின் அடிப்படையும் கூட.
அழகான தருணங்களை நினையுங்கள்: கணவன் மனைவியின் சண்டையிட்ட பிறகு நீங்கள் இருவரும் உங்களது மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றாக படம் பார்த்தது, பயணித்தது, கடினமான நாட்களில் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் போன்றவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக வாதங்கள் வேண்டாம்: கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும் போது அதை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சண்டையை உடனே அங்கே விட்டு விடுங்கள். அதை மீண்டும் தொடர வேண்டாம். மேலும், அதிக வாதங்கள் பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தும். முக்கியமாக சண்டை முடிந்த பிறகு இருவரும் பேசிக்கொள்ள மறக்காதீர்கள்.
ஆலோசனை அவசியம்: கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் ஏற்படும் போது, சில சமயங்களில் அவசர அவசரமாக முடிவெடுத்து உறவை முறித்துக் கொள்வார்கள். இதுமாதிரி நடக்கும் வாய்ப்பு அதிகம். எனவே முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெரியவர்களின் அறிவுரைகளையும் கேளுங்கள். அவர்களின் அனுபவ வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கும்.
இதையும் படிங்க: கணவன்மார்களே! இந்த 6 வினாடி கிஸ் ஃபார்முலா ரகசியம் பற்றி அவசியம் தெரிஞ்சிகோங்க!
முகம் பார்த்து பேசுங்கள்: கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரோடொருவர் பேசுவதை நிறுத்தினால், இருவரும் நேருக்கு நேர் அமர்ந்து உங்கள் பிரச்சனைகளை அங்கேயே தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இதன் மூலம் உங்கள் பிரச்சனை நிச்சயம் தீர்க்கப்படும்.
இதையும் படிங்க: வெங்காயமும், பூண்டும் அதிகம் சாப்பிட்டால் பாலியல் ஆசை அதிகரிக்குமா..? உண்மை என்ன..?
இந்த மனோபாவத்தை விட்டு விடுங்கள்: ஒவ்வொரு முறையும் கணவன் மனைவிக்குள் சண்டை வரும்போது, கணவன் வந்து பேச வேண்டும் என்று மனைவி விரும்புகிறாள். மனைவி முதலில் பேச வேண்டும் என்று கணவன் விரும்புகிறான். இந்த மனோபாவத்தை முதலில் விட்டு விட்டுங்கள். இது தவறு.
நகைச்சுவை: கணவன் மனைவி இடையே சண்டைக்குப் பிறகு, ஒருவரையொருவர்கேலி செய்து ஒன்றாக சிரியுங்கள். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நகைச்சுவைக்கு அதன் வரம்புகள் உள்ளன. மேலும், உங்கள் சண்டையை அதிகம் செய்யாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D