Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?
ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜாம்நகரில் இருந்து கிளம்பும்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய கருத்துகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
Rajinikanth and family
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதில்... நடைபெற்ற உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
rajinikanth
தொடர்ந்து 3 நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே... இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்திருந்த பிரபலங்கள், இன்று தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இன்று சென்னை திரும்பியுள்ளார்.
rajinikanth
மேலும் கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து பேசிய அவர், நிதா மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கான செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது என பிரமித்து போய் கூறினார். அதே போல் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியினருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை ரஜினிகாந்த்.
rajinikanth
அதே போல் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியினருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.