என் மகனோட படத்தை காப்பி அடிச்சு தான் பாகுபலியே எடுத்தாங்க.... பகீர் தகவலை வெளியிட்ட கோட் பட நடிகரின் தந்தை
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன பாகுபலி திரைப்படம் தமிழ் படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக பிரபலம் ஒருவர் கூறி இருக்கிறார்.
GOAT movie Prashanth
ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா டகுபதி வில்லனாகவும் நடித்திருந்தார். மேலும் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் மட்டுமல்லாமல் சிவகாமிதேவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் ஆகியோரின் கேரக்டரும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
Prashanth, Thiagarajan
வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களையும் பாகுபலி சந்தித்திருக்கிறது. அதில் ஒன்று தான் காப்பி சர்ச்சை, அதன்படி பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து சில காட்சிகளை திருடி பாகுபலி படத்தில் ராஜமவுலி பயன்படுத்தியாகவும் பேச்சு அடிபட்டது. இதுதவிர ஹாலிவுட் படங்களில் இருந்தும் சில காட்சிகளை அபேஸ் செய்து பாகுபலி படத்தில் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படியுங்கள்... LCU நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்... லோகியின் பர்த்டே பார்ட்டியில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாஸ் ஹீரோ
Prashanth Father Thiagarajan
அதில் தற்போது புது வரவாக, தமிழ் சினிமாவில் சில வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ள இயக்குனர் தியாகராஜன், சமீபத்திய பேட்டியில், பாகுபலி படத்தை விமர்சித்து பேசி இருக்கிறார். அதன்படி பாகுபலி திரைப்படம் தன் மகன் பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படத்தில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அதேபோல் காந்தாரா படமும் காப்பியடித்து எடுக்கப்பட்டதாக அவர் கூறி இருக்கிறார்.
ponnar shankar
மேலும் பிரசாந்தின் கெரியர் சரிவை சந்தித்ததற்கு பொன்னர் சங்கர் படமும் ஒரு காரணம் என தியாகராஜன் கூறி உள்ளார். ஏனெனில் அப்படத்திற்காக சுமார் 5 ஆண்டுகள் கடினமாக உழைத்த பிரசாந்த், வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தாராம். கலைஞர் எழுதிய நூலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியதற்கு காரணம் அந்த சமயத்தில் சரிவர இப்படம் ரிலீஸ் செய்யப்படாதது தான் என தியாகராஜன் கூறி உள்ளார். இப்படத்தை தியாகராஜன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் பிரசாந்த் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸூக்கு டஃப் கொடுக்க வரும் பிரேமலு... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இதோ