வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை... ‘தாராள பிரபு’ வாக மாறி நிவாரண நிதியை வாரி வழங்கிய ஹரிஷ் கல்யாண்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாண் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.
harish kalyan
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் சிக்கியது. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக இருக்க மாநகராட்சி ஊழியர்களின் தொடர் முயற்சியால் வெள்ள நீர் துரிதமாக அகற்றப்பட்டு வருகிறது. சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீர் பெரும்பாலும் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ள நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
parking movie hero harish kalyan
வெள்ள பாதிப்பால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக ரூ.5000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதுதவிர சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த உதவியை முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bigg boss fame harish kalyan
அந்த வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்ததும் நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தனர். இதேபோல் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களுக்காக படகுகளில் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
harish kalyan Flood relief
இந்த நிலையில், பிக்பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண், ரூ.1 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். இதனை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கான வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ள அவர், அந்த காசோலையை புகைப்படம் எடுத்து தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஹரிஷ் கல்யாணின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வெள்ள நீர் அகற்றம்... என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க...! மாநகராட்சி ஊழியர்களை பாராட்டிய லிங்குசாமி