கட்டப்பா வேடத்தில் டாப் ஸ்டாரை நடிக்க வைக்க ஆசை பட்ட ராஜமௌலி! அவரின் போறாத நேரம்? சத்யராஜுக்கு வந்த வாய்ப்பு!
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2 பாகமாக வெளியான 'பாகுபலி' படத்தில், கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தது யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை சந்திப்பது சகஜம் தான். ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி வெளியான, 'பாகுபலி' என்ற பிரமாண்ட படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சுமார் 500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக இயக்கி இருந்த இந்த படத்தில், பிரபாஸ் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ராணா டகுபதி முரட்டு தனமான வில்லனாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் வியக்க வைத்தார். மேலும் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகிய பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம், அனைத்து பிரபலங்களுமே... உலக அளவில் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர்களாக மாறினார். அதில் குறிப்பாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று, சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம். இந்த படத்தின் மூலம் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக சத்யராஜ் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கினார்.
ஆனால் முதலில் சத்யராஜ் நடித்திருந்த இந்த கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த இருந்தது பாலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சஞ்சய் தத் தானாம். இது குறித்து ராஜமௌலியின் தந்தையும், ‘பாகுபலி’ படத்தின் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத், தனது பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் கட்டப்பாவாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் அவர் சிறையில் இருந்ததால், அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே தான் சத்யராஜை யோசித்து அந்த வேடத்தில் நடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.