கெட்டவளாக இருந்த மனோகரி.. எழிலுக்காக இப்படி கேடுகெட்டவளா மாறி போட்ட புது நாடகம்! நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மனோகரி மாப்பிள்ளை உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து தப்பா பேசினதாக சொல்லி புது நாடகத்தைப் போட எழில் நம்ப மறுக்க மனோகரி கோபப்பட்டு சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, திடீரென மனோகரியை வீட்டில் காணாத நிலையில் அவளை எல்லோரும் தேட எழில் ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு விசாரிக்க அங்கும் வரவில்லை என்பது தெரிய வருகிறது.
இந்த நிலையில் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருக்கும் மனோகரி செல்விக்கு போன் போட்டு நான் சொல்ற மாதிரி செய்யணும் என ரகசியமாக ஏதோ சொல்ல உடனே செல்வி போனை வைத்துவிட்டு ஒரு லெட்டரை எடுத்துக் கொண்டு கீழே சென்று மனோகரி அம்மா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிட்டு இருக்காங்க என்று சொல்ல எழில் உண்மையை சொல்லு மனோகரி எங்கே என அதட்டி கேட்க ஹோட்டலில் இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறாள்.
அதன் பிறகு எழில் ஹோட்டலுக்கு கிளம்பிச் செல்ல செல்வி மனோகரிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் ஐயாவும் நம்பிட்டாரு என சொல்கிறாள். மேலும் ஹோட்டலுக்கு கிளம்பி வரும் விஷயத்தையும் சொல்கிறாள். அதே நேரத்தில் செல்வி பேசியதை சுடர் கேட்டு விடுகிறாள்.
அடுத்ததாக எழில் ஹோட்டலுக்கு வர ஜன்னல் வழியாக இதை பார்த்த மனோகரி போலீசுக்கு போன் போட்டு ஹோட்டலில் இல்லீகளாக சில விஷயங்கள் நடப்பதாக பொய் சொல்கிறாள். பிறகு எழில் மனோகரியின் ரூமுக்குள் வந்து எதுக்கு இப்படி பண்ண என்று பேசிக் கொண்டிருக்க மனோகரி அவனை கட்டிப்பிடித்து கண் கலங்கியபடி டிராமா போட போலீஸ் உள்ளே நுழைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.