KPY Bala: 200 குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த விஜய் டிவி குக் வித் கோமாளி பாலா! குவியும் பாராட்டு!
KPY நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த 200 குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார்.
kpy bala
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்று மிக்ஜாம் புயலாக உருமாறியது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் பலத்த காற்று வீசியது மட்டுமின்றி, இடைவிடாமல் இரண்டு நாட்கள் பெய்த மழையால் ஏரி குளங்கள் நிரம்பியதோடு, சென்னையில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்தது.
KPY Bala
இதனால் சென்னையில் வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. பலர் வேலைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவது ஒரு பக்கம் இருக்க, எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக மாறி உள்ளது. அதேபோல் பெரும்பாலான கடைகள், மருந்தகங்கள், உள்ளே தண்ணீர் புகுந்துள்ளதால் குழந்தைகளுக்கு பால், வயதானவர்களுக்கான மருந்துகள் வாங்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.
KPY Bala
அதேநேரம் வேலைக்கு போனால் தான் சாப்பாடு என இருக்கும் அன்றாடம் காட்சி மக்கள் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். முடிந்தவரை தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போட் மூலம் சென்று சாப்பாடு, தண்ணி, போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தாலும்... அனைத்து பகுதிகளிலும் அவர்களால் செல்ல முடியவில்லை. எனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலர் தங்களுக்கு அருகே இருக்கும் இடங்களில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
KPY Bala
இவர்களுடன் இளைஞர்கள் பலர் கைகோர்த்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 200 குடும்பங்களுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார் குக் வித் கோமாளி பாலா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏற்கனவே மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு 4 ஆம்புலன்ஸ்கள் வாங்கிக் கொடுத்துள்ள பாலா, பல ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அவ்வப்போது தன்னிடம் உதவி கேட்கும் பலருக்கு கையில் கிடைக்கும் பணத்தை கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில்... பாலா மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கி உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து பலர் பாலாவை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.