முதல் சம்பளம் ரூ.2500.. ஆனா இன்று ஒரு படத்திற்கு ரூ.22 கோடி சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார்.. யார் தெரியுமா?
ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய இந்த நடிகரின் முதல் சம்பளம் ரூ. 2,500 மட்டுமே. ஆனால், இன்று அவர் ஒவ்வொரு படத்திற்கும் 22 கோடி சம்பளம் வாங்குகிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களை எப்போதுமே அவர்களின் ரசிக்கிறார்கள். ஆனால் சினிமாவில் ஒருவர் சூப்பர்ஸ்டாராக மாறுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பல சோதனைகள், விமர்சனங்களை கடந்து தான் அவர்கள் இன்று உச்ச நடிகர்களாக மாறி உள்ளனர்.
Nani
அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் ஒரு சூப்பர்ஸ்டார் இருக்கிறார், அவர் ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்று நினைத்தார், ஆனால் மூத்த இயக்குனர்களால் அவமானப்படுத்தப்பட்டார். ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய அவரின் முதல் சம்பளம் ரூ. 2,500 மட்டுமே. ஆனால், இன்று அவர் ஒவ்வொரு படத்திற்கும் 22 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
நாம் பேசும் நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் நானி தான். கடந்த ஆண்டு தசரா மற்றும் ஹாய் நன்னா ஆகிய படங்களின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்தவர். மணிரத்னத்தின் தீவிர ரசிகரான அவர் ஒருக்கட்டத்தில் இயக்குனராக ஆசைப்பட்டு, அனில் கோனேருவின் தயாரிப்பில் ராதா கோபாலம் திரைப்படத்தில் இயக்குனர் பாபுவுடன் கிளாப் இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு அல்லரி புல்லோடு, அஸ்திரம், டீ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நானி பல அவமானங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஒரு இயக்குனர் தான் ஒரு போதும் இயக்குனராகவே ஆகமாட்டேன் என்று கூறியபோது தான் வருத்தப்பட்டதாக சில நேர்காணல்களில் அவரே கூறியுள்ளார். இதனால் பல நேரங்களில் தான் மனமுடைந்து போனதாகவும் கூறியுள்ளார்.
ஒரு திரைப்பட இயக்குனர் தன்னை மிகவும் அவமானப்படுத்தியதை நானி சில பேட்டிகளில் நினைவு கூர்ந்தார். “அவர் என்னை எல்லோர் முன்னிலையிலும் மோசமாக அவமானப்படுத்தினார். நான் இயக்குனராகவே ஆகமாட்டேன் என்றும், உண்மையான இயக்குனராகும் தகுதி என்னிடம் இல்லை என்றும் அவர் எனக்கு சாபம் விட்டார்” என்று கூறினார்.
இயக்குனராக வேண்டும் என்பது தனது கனவு என்றும், அவமானங்களுக்குப் பிறகு அதைத் தாங்குவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். ஒரு படத்திற்கு அவர் ஸ்கிரிப் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு ரேடியோ ஜாக்கி வேலை வழங்கப்பட்டது என்று ஒரு ஆண்டு அங்கு பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘நான்-ஸ்டாப் நானி’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திரகாந்தி ஒரு விளம்பரத்தில் நானியை கவனித்துள்ளார். இதை தொடர்ந்து அஷ்ட சம்மா படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
பின்னர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஈகா படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் நானிக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான். நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பா, நின்னு கோரி, தேவதாஸ் மற்றும் ஜெர்சி போன்ற அவரது படங்கள் அவரை தென் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. இவர் அடுத்ததாக சரிபோதா சனிவாரம் படத்தில் நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்க உள்ளார்.