மகா சிவராத்திரி நாளில் 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மங்கள யோகம்.. என்ன சிறப்பு தெரியுமா?
இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் 300 ஆண்டுகளுக்கு பின் மங்கள யோகம் உருவாவதால் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவபெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளை சிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அப்படி மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாளை தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம்.ர்.
இந்துக்களின் மிகவும் முக்கியமான விரத நாட்களில் ஒன்றான சிவராத்திரியை நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இரவு 8.20 மணி முதல் மார்ச் 9 மாலை 6 மணி வரை சதுர்த்தசி திதி உள்ளது.
இந்த மகா சிவராத்திரி நாள் 300 ஆண்டுகளுக்கு பின் மங்கள யோகம் உருவாவதால் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி 300 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வார்த்த சித்தி யோகமும், சிவயோகமும் சேர்ந்துள்ளது. மகா சிவராத்டிஹ்ரி உடன் சுக்ர பிரதோஷ விரதமும் உள்ளது.
எனவே இந்த யோகங்களில் வழிபாடு செய்யும் போது அது பன்மடங்கு பலனை தரும், என்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களான தொழில், வணிகம் மற்றும் ஒட்டுமொத்த செழிப்பு போன்றவற்றில் வெற்றியை கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.
இதில் சர்வார்த்த சித்தி யோகம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு பெயர் பெற்றது. சிவயோகம், தியானம் மற்றும் மந்திரம் ஓதுவதற்கு ஏற்றது. மஹாசிவராத்திரி அன்று காலை 06:38 முதல் 10:41 வரை சர்வார்த்த சித்தி யோகம், சூரிய உதயம் முதல் நள்ளிரவு 12:46 வரை நாள் முழுவதும் சிவயோகம் இருக்கும்.
எனவே இந்த நாளில், சிவனை வழிபடுவதன் மூலம் சிவ பக்தர்கள் இரட்டிப்பு ஆசீர்வாதங்களைப் பெறமுடியும். சிவயோகத்தில், மங்கள நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மூலம் சிவபெருமானின் ஆசியை பெற முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதும் ஐதீகம். சித்த யோகம், தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது. இந்த யோகத்தின் போது வழிபடுவதன் மூலம் உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வீட்டில் செல்வமும் பெருகும்
இந்த ஆண்டு ஒரே நாளில் மஹாசிவராத்திரி மற்றும் சுக்ர பிரதோஷ விரதமும் சேர்ந்து வருவதால் இது மிகவும் மங்களகரமான நாள் என்றும், இந்த புனித நாளில் சிவனை வழிபடுவது அனைத்து தடைகளும் நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியை கிடைப்பதுடன், குடும்பத்தில் செழிப்பும், திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.