Annapoorani: லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்! மும்பை போலீசார் வழக்கு பதிவு
லவ் ஜிகாத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' படத்தில் காட்சிகள் இடம்பெற்றுளளதாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20-ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. கடந்த மாதம் டிசம்பர் 1-ஆம் தேதி இவரது 75வது படமாக வெளியானது 'அன்னபூரணி' திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும், மழை, வெள்ளம் போன்ற இயற்க்கை பேரிடருக்கு நடுவே சிக்கி வாஷ் அவுட் ஆனது.
இப்படம் சமையல் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில் பெண்கள் ராஜ்ஜியம் என்றாலும், நட்சத்திர ஹோட்டல் முதல் சாதாரண ரோட்டு கடை வரை, ஆண்கள் தான் மாஸ்டராக உள்ளனர். இதனை தகர்த்து, அந்த இடத்திற்கு ஒரு பெண் வர நினைத்தால்... எத்தனை சங்கடங்களை சந்திக்கிறாள் என்பதே இப்படத்தின் கதைக்களமாக அமைந்தது.
இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார். பூர்ணிமா ரவி, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தற்போது இப்படம் லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படத்தின் காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியதாகவும், இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வால்மீகியின் ராமாயணத்தை தவறாக சித்தரித்து ராமரை விமர்சித்ததாக இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.
சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?
அதே போல் இப்படத்தின் காட்சிகளும் சில சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. நயன்தாரா சமையல் போட்டியின் ஃபைனலில் கலந்து கொள்வதற்கு முன்... தலையை தாவணியால் மூடிக்கொண்டு நமாஸ் செய்வார். அதாவது நயன்தாரா பிரியாணி செய்வதில் மட்டும் சற்று சொதப்புபவராக இருந்தாலும், ஜெய்யின் அம்மா நமாஸ் செய்து விட்டு பிரியாணி செய்வேன், என கூறியதை மனதில் வைத்து இப்படி செய்து விட்டு, பிரியாணி செய்வார். இதனால் பிரியாணியும் நல்ல சுவையுடன் வந்தனாக தெரிவிப்பார். இந்த காட்சியும் பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா, ஜெய், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.