சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?
கலைஞர் 100 விழாவில், அஜித் மற்றும் விஜய் கலந்து கொள்ளாததன் பின்னணி குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து நடத்திய கலைஞரின் நூற்றாண்டு விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கமல்ஹாசன் ரஜினிகாந்த்துக்கு இரண்டு முறை பிரத்தியேகமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இருவருமே நிகழ்ச்சி துவங்கியது முதல்... நிகழ்ச்சி முடியும் வரை இருந்து கலைஞர் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
நேற்று முன்தினம், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலைஞரின் மகனும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் உள்ளிட்ட சில அரசியல் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில், ரஜினி - கமல்ஹாசனுக்கு அடுத்த படியாக... ரசிகர்கள் எதிர்பார்த்த இரு பிரபலங்கள் என்றால் அஜித் மற்றும் விஜயின் வருகையை தான். ஆனால் விழா நடைபெறும் இந்த நேரத்தில், விடாமுயற்சி மற்றும் கோட் படத்தின் படப்பிடிப்பில் இருவருமே வெளிநாட்டில் இருப்பார்கள் என்பதால் இவர்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தான் இருவரும் இருந்ததாகவும், ஆனால்... அஜித் - விஜய் இருவருமே 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளவில்லை என புதிய தகவலை வலைப்பேச்சு மூலம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்தணன்.
Ajith kumar
அஜித் - விஜய் இருவரும் ஏன் கலைஞர் 100 விழாவிற்கு வரவில்லை, என்ன பிரச்சனை? என்பது குறித்த பின்னணி பற்றியும் கூறியுள்ள அந்தணன், கமல் மற்றும் ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்ட மரியாதை விஜய் மற்றும் அஜித்துக்கு கொடுக்கப்பட வில்லை என்கிற, காரணத்தால் கூட இவர்கள் இருவரும் கலைஞர் 100 விழாவை புறக்கணித்திருக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றி எந்த அஜித் - விஜய் தரப்பில் இருந்து கூறினால் மட்டுமே தெரியவரும்.