Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்
நடிகை நயன்தாரா தன்னுடைய மகனின் செல்ல சேட்டைகளின் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'நானும் ரௌடி' தான் படத்தில் நடிக்கும் போது, விக்கியை காதலிக்க துவங்கினார். 6 வருடங்களுக்கு மேல் பிரேக் அப் ஆகாமல் தொடர்ந்த, இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் பச்சை கொடி காட்டியதை அடுத்து, 2022-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் சென்னை ERC, மகாபாலி புறத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. விக்கி - நயன் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, அஜித் மனைவி ஷாலினி, ஷாருக்கான், தொகுப்பாளினி டிடி, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் வாங்கிய நிலையில், திருமண டீசரை மட்டுமே வெளியிட்டது. ஆனால் இதுவரை திருமண வீடியோவை வெளியிடவில்லை. தற்போது வரை இதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
திருமணம் முடிந்த நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா... ஒருபுறம் தன்னுடைய திரையுலக பணிகளில் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம், குழந்தை, கணவர், குடும்பம் ஆகியவற்றை பொறுப்பாக பார்த்து கொள்ளும் குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய இரு குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன், தற்போது தன்னுடைய மகனின் செல்ல சேட்டைகளின்... புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். செல்ல மகன் எதையோ கையில் வைத்து கொண்டு அடம் பிடிக்க, அவரை அன்பால் அமைதியாக்கியுள்ளார் நயன்தாரா. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்த கியூட் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.