ஜெயலலிதா தான் உண்மையான ‘நீலாம்பரி’யா? படையப்பா படத்தின் டாப் சீக்ரெட்டை டக்குனு போட்டுடைத்த KS ரவிக்குமார்
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர் ஜெயலலிதாவை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறி உள்ளார்.
Padayappa BTS photo
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் முத்து. இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஜப்பான் நாட்டிலும் சக்கைப்போடு போட்டது. ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைத்து இருந்தது. கடந்த ஆண்டு தான் ஆர் ஆர் ஆர் படம் ஜப்பானில் ரிலீஸ் ஆன போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
KS Ravikumar
இந்த நிலையில், முத்து திரைப்படம் புதுப்பொலிவுடன் வருகிற டிசம்பர் 8-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரவிக்குமார் தனது படங்களில் இடம்பெற்ற கேரக்டர்கள் பற்றி மனம்திறந்து பேசினார். குறிப்பாக அவர் இயக்கிய படையப்பா படத்தில் இடம்பெறும் நீலாம்பரி கேரக்டரி ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எழுதி இருந்தார் என்கிற பேச்சு அப்போதிலிருந்தே எழுந்தது. இதுபற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் ரவிக்குமார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ramya Krishnan, Jayalalitha
இதுபற்றி அவர் கூறுகையில், படையப்பால நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா மேடம்னு எல்லாரும் சொல்வாங்க. நான் எழுதும்போதும் மனதில் அவரை வைத்து தான் எழுதினேன். ஏனெனில் அப்படி ஒரு கம்பீரமான பெண்மணிக்கு எப்படியெல்லாம் உடல்மொழி இருக்கணும்னு ஃபீல் பண்ணிதான் எழுதினேன். ஆனா அந்த படம் எல்லா நாட்டுலையும் ஓடியிருக்கே, அங்கிருப்பவர்களுக்கு ஜெயலலிதாவை பற்றி தெரியாது. இதனால் தான் படம் வெற்றியடைகிறது என்பதில்லை. இவையெல்லாம் எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி.
Ramya Krishnan, Rajinikanth
அதேபோல் படையப்பா படத்தில் இடம்பெறும் ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே பாடலில் தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள என்கிற வரிகள் எம்.ஜி.ஆரை தாக்கும் விதமாக வைக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு பதிலளித்த ரவிக்குமார், அவரை தாக்கிபாடவில்லை. எம்.ஜி.ஆராகவே இருந்தாலும் கடைசில மண்ணுக்குள்ள தான், அது தான் இயற்கை என்பதை உணர்த்தவே அந்த வரிகள் வைக்கப்பட்டது. அவரை குறைசொல்லும் விதமாக வைக்கப்படவில்லை. அவருக்கே அந்த கதி என்றால் நாமெல்லாம் யாரு என்பதை சொல்லவே அந்த வரிகள் இடம்பெற்றதாக கூறினார்.
இதையும் படியுங்கள்... 2023-க்கான டாப் 10 படங்கள் பட்டியல் வெளியீடு... தலைவருடன் சேர்ந்து பாலிவுட் படங்களுக்கு தண்ணி காட்டிய தளபதி