இனி அரிசியில் பூச்சி, புழு வராமல் இருக்க செம்ம டிப்ஸ்!! கண்டிப்பா செஞ்சு பாருங்க..
பல நேரங்களில் நாம் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் புழு, பூச்சிகளால் தாக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்த தந்திரங்களின் மூலம் நீங்கள் நீண்ட நாள் அரிசியை சேமிக்க முடியும்.
அரிசியின் விலையானது தங்கம் போல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரிசியை தவிர பருப்பு போன்ற பிற இதர தானியங்களின் விலையும் அதிகமாக தான் இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டில் அதிக அளவில் அரிசி, பருப்பு மற்றும் பிற இதர தானியங்களை சேமித்து வைக்கிறார்கள்.
ஆனால் இப்படி மொத்தமாக சேமித்து வைக்கும் போது அவற்றில் புழு பூச்சிகள் வரத் தொடங்குகின்றனர். இதனால் அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு கெட்டுப் போகிறது.
எனவே, அரிசி போன்ற இதர தானியங்களை நீண்ட நாள் சேமிப்பது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இதனால் அவை வருட கணக்கில் கெட்டுப்போகாது நீங்கள் ஆண்டு முழுவதும் அவற்றை நன்றாக பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க: வெறும் 2 நிமிடத்தில் கேஸ் பர்னரை சுத்தம் செய்ய ஈஸியான ஐடியா..!
பிரியாணி இலை: இது பொதுவாக பிரியாணி மற்றும் பிற மசலா பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இவற்றின் வாசனை நமக்கு பிடிக்கும். ஆனால், பூச்சிகள் விரும்புவதில்லை. ஆகவே, உங்களிடம் அதிக அளவு பருப்பு, அரிசி இருந்தால் அதில் இந்த இலையை 4-5 சேர்க்கவும். அவற்றின் வாசனை பூச்சிகள் வருவதை தடுக்கிறது.
இதையும் படிங்க: இட்லி ஸ்டாண்டை சுத்தம் செய்ய சிரமப்படுறீங்களா? அப்ப இந்த சிம்பிள் டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க!
சிவப்பு மிளகாய் வத்தல்: இது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். இவற்றில் இருக்கும் காரத்தன்மை நமக்கு நெடியை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் இதை சேமித்து வைத்திருக்கும் தானியத்தில் போடுங்கள். பூச்சிகள் வராது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வேப்பிலை: இது மருத்துவ குணம் நிறைந்தது என்று நாம் அனைவருக்கும் தெரியும். எனவே, நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க இந்த இலையை அதில் சேர்க்க வேண்டும். இதனால் அரிசி பல மாதங்கள் கெட்டுப் போகாது. அதில் பூச்சிகள் தாங்காது.