சுடிதார் அணிந்து வந்த சொர்கமே... திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகில் கயல் ஆனந்தி! போட்டோஸ்.!
திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பின்னரும், குடும்பப்பாங்கான வேடங்களை தேர்வு செய்து கதாநாயகியாக கலக்கி வரும் கயல் ஆனந்தி, சல்வார் அணிந்த சொர்கமாய் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு, வெளியான ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. இந்த படத்தில் தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்த ஆனந்திக்கு அடுத்தடுத்த படங்களில், நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற தரமான படங்களில் நடித்தார்.
இந்நிலையில் கயல் ஆனந்தி, கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரும், துணை இயக்குனருமான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார்.
இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் பணியாற்றும் போது ஆனந்தியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்து பின்னர் கல்யாணமாகவும் கனிந்தது.
திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான ஆனந்தி, குழந்தை பிறந்த தகவலை கூட வெளிப்படுத்தாமல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் கடந்த ஆண்டு ராவண கோட்டம் படத்தின் பிரெஸ் மீட்டில் தான் தன்னுடைய குழந்தை பற்றி கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
கணவர், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும், தொடர்ந்து திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சல்வார் அழகில் ஜொலிக்கும் ஆனந்தியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D