அபிராமிக்கு 60ம் கல்யாணம்... அழைப்பு விடுத்த தீபா; கலந்துகொள்வாரா ரம்யா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அருண், ஆனந்தை சந்தித்து அம்மா அப்பாவின் அறுபதாம் கல்யாணம் பற்றி பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அருண், ஆனந்தை சந்தித்து அம்மா அப்பாவின் அறுபதாம் கல்யாணம் பற்றி பேசியதோடு ரம்யாவையும் வீட்டுக்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரம்யாவின் மனசாட்சி தோன்றி நீ இந்த ஃபங்ஷனுக்கு போகலனா அம்மு, ரம்யா ரெண்டு பேரும் ஒருத்தர் தான் என்ற உண்மை கார்த்திக்கு தெரிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க, தீபா போன் செய்து நாளைக்கு கல்யாண நாள் கண்டிப்பா வரணும் என்று கூப்பிடுகிறாள்.
Zee Tamil Karthigai deepam serial
மேலும் நீ வரலனா நானும் கார்த்தியும் சேர்ந்து வந்து உன்னை கூட்டிட்டு வருவோம் என்று சொல்ல, ரம்யா வருவதாக வாக்கு கொடுக்கிறாள். இதையடுத்து தீபா மீனாட்சி கழட்டி வைத்த தாலியை எடுத்து கார்த்திக்கிடம் கோவிலுக்கு சென்று தாலியை வைத்து பிரார்த்தனை செய்யப் போவதாக சொல்லி கிளம்பி வருகிறாள்.
இதையும் படியுங்கள்... Anna serial : தர்மகத்தா தேர்தலில் பரணியை களமிறக்கும் ஷண்முகம்... ஷாக் ஆன செளந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
Karthigai deepam serial Update
மறுபக்கம் அபிராமி வருத்தமாக உட்கார்ந்து இருக்க அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க, ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துட்டா ஆனா மீனாட்சி இந்த வீட்டில் இருந்தாலும் ஆனந்தோட சேர்ந்து வாழாமல் இருக்கா, பங்ஷன்ல இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்று புலம்ப, அருணாச்சலம் கார்த்திக் இருக்கான்ல அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று ஆறுதல் கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து தீபா கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு கற்பூர ஆரத்தி தொட்டு கும்பிடும் போது கற்பூரம் அணைந்து விட, அபசகுணமாக தெரிவதாக பதற, கார்த்தி காற்றில் அணைந்திருக்கும் என்று சொல்லி ஆறுதல் சொல்கிறான்.
Karthigai deepam serial Today Episode
தீபா நகர்ந்து வந்ததும் கடவுளிடம் தீபாவ சமாதானம் செய்யத்தான் அப்படி சொன்னேன் பங்க்ஷன்ல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக் கொள்கிறான். அடுத்ததாக ஒரு பெரிய மண்டபத்தில் 60-ம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... ஷங்கர் மகளா இது? ரெட் ரோஸ் போல் போஸ் கொடுத்து அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ