பல அவமானங்களை கடந்து வந்த விஜயகாந்த்! 26 வருடத்திற்கு முன் நடந்த சம்பவம்! நடிகர் சங்க விழாவில் பகிர்ந்த கமல்!
கேப்டன் விஜயகாந்துக்கு இன்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்களை மேடையில் அசைபோட்டர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Captain Vijayakanth
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 8 வருடங்களாகவே உடல் நல குறைவு காரணமாக, தொடர்ந்து ஓய்வில் இருந்த நிலையில்... கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட சளி பிரச்சனை, நுரையீரல் தொற்றுக்கு வழிவகுத்தது. இதற்கான சிகிச்சை எடுத்து வந்த விஜயகாந்த், அதில் இருந்து மீண்ட பின்னர், மீண்டும் டிசம்பர் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hmhc0acyc7tkz8v7rm19bzge/gen8pgwaeaa7ehc_300x199xt.jpg)
இவரது மரணம் ஒட்டு மொத்த தமிழக மக்களையும், கட்சி தொண்டர்களையும், சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேபட்டனுக்கு அஞ்சலி செலுத்த லாரியில் பஸ்சிலில் பலர் வெளியூரில் இருந்து வந்து அஞ்சலி செலுத்தினர். அதே போல் இவரது இறுதி ஊர்வலத்திலேயில் புடை சூழ வந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறியது, பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கலங்க செய்தது.
விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத மக்கள் பலர் தொடர்ந்து அவரது நினைவிடத்திற்கு வருகை தந்து வருகிறார்கள். அதே போல் பிரபலங்கள் பலர் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வருவது மட்டும் இன்றி, அவரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் செலுத்தும் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன், விஜயகாந்த் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். "பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த் என தெரிவித்தார். அதே போல் கடைநிலை நடிகர்களுக்கெல்லாம் விஜயகாந்த் ஒரு கடவுளாக இருந்துள்ளார். விஜயகாந்த்திடம் எனக்கு பிடித்தது அவரது நியாயமான கோபம் என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், விஜயகாந்த் கடந்த 26 வருடத்திற்கு முன்பு.. அதாவது 1998 ஆம் ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கு பணம் இல்லாமல் இருந்த மூன்று மாணவர்களை பற்றிய செய்தி நாளிதழில் வெளியானது. உடனடியாக அந்த நாளிதழை தொடர்பு கொண்டு அந்த மூன்று மாணவர்களின் படிப்பு செலவை விஜயகாந்த் ஏற்று கொண்டார். அவர்கள் இப்போது மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் இதை மறந்திருக்க மாட்டார்கள். இப்படி பலருக்கு உதவியுள்ளார் விஜயகாந்த் என கமல் நெகிழ்ச்சியுடன் பேசினார்.