Prabhas Donate 50 Crore: ராமர் கோவில் திறப்பு.. ரூ.50 கோடி நன்கொடை கொடுத்தாரா பிரபாஸ்? வெளியான உண்மை!
ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரபாஸ் ரூ.50 கோடி கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில், உண்மை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் கோவிலுக்கு, நடிகர் பிரபாஸ், ரூபாய் 50 கோடி பணத்தை அள்ளிக்கொடுத்ததாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதற்க்கு பிரபாஸ் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி, ஒரு சிறந்த மனிதராக பார்க்கப்படுபவர். எப்படி அஜித் பல மக்களுக்கு தன்னை பிரபலப்படுத்தி கொள்ளாமல் உதவுகிறாரோ அதே போல், தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி தேவை படுபவர்களுக்கும் முதல் ஆளாக ஓடி சென்று உதவுபவர்.
Prabhas
விருந்தோம்பல் பண்பில் பிரபாஸை அடித்து கொள்ள முடியாது. தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் அவர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் அவருடைய வீட்டில் விருந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் ஷூட்டிங் ஸ்பாட்டிலும்... அனைவரும் சாப்பிட்டு விட்டார்களா? என கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் மனம் படைத்தவர். இந்த குணம் தான் இவரின் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்களால் எப்போதும் அதிகம் விரும்பப்படும் நாயகனாக இவரை உச்சத்தில் வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் கோயிலுக்கு, பிரபாஸ் தரப்பில் இருந்து ரூ.50 கோடி நன்கொடை அளித்ததாக செய்திகள் வெளியானது. இந்த தொகையை பிரபாஸ், ராமர் கோவில் திறப்பு நாளான, ஜனவரி 22-ஆம் தேதி, அனைவருக்கும் வழங்கப்பட உள்ள உணவுக்காக கொடுக்கப்பட்டதாக செய்திகள் பரவின.
Gayathri Raghuram join ADMK : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்!
ஆனால் பிரபாஸ் தரப்பில் இருந்தோ... அல்லது ராமர் கோவில் நிர்வாகிகள் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, ஆந்திர பிரதேச எம்.எல்.ஏ சிர்லா ஜக்கிரெட்டி, ராமர் கோவில் திறப்பு விழா அன்று உணவுக்கான செலவுகளை பிரபாஸ் பார்த்து கொள்வார் என தெரிவித்தது... இப்படி வெளியான தகவலை உறுதி செய்யும் விதத்தில் அமைந்தது.
இந்து குறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்... பிரபாஸ் ரூ.50 கோடி கொடுத்ததாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்பதை பிரபாஸ் தரப்பு உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. பிரபாஸுக்கு இதுவரை ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில். பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வது உறுதி. முதல் நாளில் மட்டும் சுமார் 75,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படுக்கைக்கு அழைத்தால்.. முத்தம் கொடுப்பேன்! ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை பாப்ரி கோஷ்!