தூண்டி விட்ட ஜோதிகா.. அப்பா சிவகுமார் பேச்சை மதிக்காமல் சூர்யா செய்த விஷயம்! கடும் கோபத்தில் குடும்பத்தினர்!
ஜோதிகாவின், பேச்சை கேட்டுக்கொண்டு... சூர்யா தந்தையின் வார்த்தையை மீறும் விதத்தில் செய்துள்ள விஷயத்தால் வெளியே சகஜமாக காட்டிக்கொண்டாலும், சிவகுமார் குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சனை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரைத் தொடர்ந்து, அவரது வாரிசான சூர்யா தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆரம்பத்தில் வாய்ப்புகள் சரியாக அமையாமல் திண்டாடினாலும், பின்னர் நிலையான இடத்தை பிடித்தார். தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவரைத் தொடர்ந்து இவருடைய சகோதரர் கார்த்தி, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் வெளிநாட்டு வேலையை தூக்கி எறிந்து விட்டு, திரை உலகில் துணை இயக்குனராக நுழைந்தார். பின்னர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார்.
அமீர் இயக்கத்தில் வெளியான இவரது முதல் படமே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. தற்போது அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் கார்த்தி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் அண்ணன் சூர்யாவுக்கு நிகராக வளர்ந்து நின்றார் கார்த்தி. இருவரும் முன்னணி இடத்தில் இருந்தாலும், எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இன்றி அண்ணன் - தம்பி இருவருமே, மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதற்கு காரணம் சிவக்குமாரின் வளர்ப்பு என்றும் கூறலாம்.
மிகவும் கட்டுக்கோப்பாக தன்னுடைய இரு மகன்களையும் சிவகுமார் வளர்த்த நிலையில், சூர்யா, ஜோதிகாவை காதலித்ததால் ஆரம்பத்தில் சிவகுமாருக்கு விருப்பம் இல்லை என்றாலும், சூர்யாவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கார்த்தியோ தன்னுடைய தாய் - தந்தை பார்த்து வைத்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார்.
Jyothika Surya
சூர்யா மனைவி ஜோதிகாவின் பேச்சை கேட்டுக் கொண்டு சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கி குடியேறினார். இவருடைய குழந்தைகளும் அங்கு தான் தற்போது படித்து வருகின்றனர். ஆனால் கார்த்தி தன்னுடைய மனைவியுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தாலும், அடிக்கடி தன்னுடைய அப்பா - அம்மாவை பார்க்க தவறியது இல்லை.
jyothika, sivakumar
இந்நிலையில், நடிகர் சூர்யா பற்றி வெளியாகி உள்ள தகவல், ஒன்று சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சூர்யா பட தயாரிப்பு மற்றும் வேறு சில நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சிவக்குமார் எந்த ஒரு ஆச்சோபனையும் தெரிவித்ததில்லை. ஆனால் சமீபத்தில் ஐ எஸ் பி எல் கிரிக்கெட் விளையாட்டுயின் சென்னை அணியை சூர்யா வாங்கியதில் சிவகுமாருக்கு துளியும் விருப்பம் இல்லையாம்.
jyothika, sivakumar
இதுவும் ஒரு சூதாட்டம் போன்றே பார்க்கப்படுவதால், ஆரம்பத்திலேயே இதனை வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் மனைவி ஜோதிகாவின் தூண்டுதலின் பேரில் சூர்யா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உள்ளேயே பல பிரச்சனைகள் புகைந்து கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
வெளியே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் நிறைய பிரச்சனை இருக்காம். ஆனால் ஜோதிகா பல நடிகர்கள் இப்படி கிரிக்கெட் டீமை வாங்கியுள்ளதால், சூர்யாவை கட்டாயப்படுத்தி வாங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா சென்னை அணியை வாங்கி உள்ளது போல், ராம்சரண் ஹைதராபாத் கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளார். மும்பை அணியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியை ரித்திஷ் தேஷ்முக்கும் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.