அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!
நடிகை ஜான்வி கபூர், தன்னுடைய சித்தி மகேஷ்வரியுடன்... சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
secret Wedding
தமிழ் சினிமாவிலில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் தான் ஸ்ரீதேவி. பெண்களே கண் கொட்டாமல் ரசிக்கும் இந்த பேரழகி... தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். பின்னர் அதிரடியாக பாலிவுட் திரையுலகில் நுழைந்து ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், பின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hbte28k9jgmngpyrd3j3mbhd/whatsapp-image-2023-10-03-at-2-59-16-pm--4-_300x399xt.jpg)
ஸ்ரீதேவியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டி என்கிற கிராமம்என்றாலும், இவர் வளர்ந்தது சென்னையில் தான். 13 வயதிலேயே 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவிக்கு அடுத்தது பட வாய்ப்புகள் தமிழில் குவிந்தது. ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக 10திற்கும் மேற்பட்ட படங்களில் ஜோடி போட்ட நாயகி என்கிற பெருமையும் ஸ்ரீதேவிக்கு உண்டு.
பாலிவுட் திரையுலகில் மார்க்கெட் கூடியதால், தமிழ் சினிமாவில் இருந்து முழுவதும் விலகிய ஸ்ரீதேவி... பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி 6 மாத கர்ப்பமாக இருந்த போது தான் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் ஜான்வி, குஷி என இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஸ்ரீதேவி, அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டி வந்தார்.
மும்பையில் திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டாலும், சென்னையில் உள்ள தன்னுடைய அம்மா மற்றும் உறவினர்களை பார்க்க, இந்த கோவிலுக்கு வரும் ஸ்ரீதேவிக்கு சில ஃபேவரட் இடங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் முப்பாத்தம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தனது தாயுடன் ஸ்ரீ தேவி வருவது வழக்கம். தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சென்னைக்கு வந்துள்ள நிலையில், தன்னுடைய சித்தி மகேஸ்வரியுடன் முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
எவ்வளவு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், கோவிலுக்கு பாவாடை தாவணியில் வந்து ஜான்வி சாமி தரிசனம் செய்த பின்னர், கோவில் வாசலில் நின்றபடி எடுத்து கொண்ட போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.