16 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி... கோலிவுட்டில் தயாரிப்பாளராக கோதாவில் இறங்கிய கோடீஸ்வரர் - யார் இந்த பாபி?
அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வரும் பாபி பாலச்சந்திரன் என்பவர் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் தயாரிப்பு நிறுவனங்கள் என்றால் அது சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனம் தான். இதில் சன் பிக்சர்ஸை விட லைகா தான் அதிக அளவிலான படங்களை கைவசம் வைத்துள்ளது. அந்நிறுவனம் தயாரிப்பில் தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம், கமல்ஹாசனின் இந்தியன் 2, அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இவற்றின் பட்ஜெட் மொத்தமாக ரூ.1500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hj86nydq6weyznze34ezejxe/04510e17-85f8-48ef-b15f-ba74ac8eae01_300x200xt.jpg)
இந்த நிலையில், லைகா நிறுவனத்துக்கே டஃப் கொடுக்க கோடீஸ்வரர் ஒருவர் தற்போது கோலிவுட்டில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்திருக்கிறாராம். அவர் பெயர் பாபி பாலச்சந்திரன். இவர் அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றார். அமெரிக்காவின் சைபர் கிரைம் காவல்துறைக்காகவும் இவரின் நிறுவனம் தான் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி இருக்குமாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாபி பாலச்சந்திரன் தமிழில் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் டிமாண்டி காலனி 2. அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டிரைலவர் அனைவரையும் கவர்ந்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இருந்தது. இப்படத்தின் பின் அடுத்தடுத்து பட தயாரிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்ல பாபி முடிவெடுத்துள்ளாராம்.
அதிலும் குறிப்பாக விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் முடிவில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாபி பாலசந்திரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருந்தார். 2025-ல் ரஜினி படத்தை பாபி தயாரிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பரமேஸ்வரன் கூறி இருக்கிறார். பாபி பற்றி அவர் கூறியுள்ள இந்த தகவல்களையெல்லாம் பார்க்கும்போது இவர் லைகாவுக்கு செம்ம டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இமான் - எஸ்.கே. மோதல் முதல் பருத்திவீரன் பஞ்சாயத்து வரை... 2023ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை