Minister Masthan: செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? தப்புமா அமைச்சர் போஸ்ட்?
சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.
mastan son mukhtiyar ali
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருந்து வந்தார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை உள் அடக்கியது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு புகார் குவிந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து கடந்த ஆண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சரின் மகனுமான மொக்தியார் அலி மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Masthan son in law rizwan
பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான். இவர் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதங்களையும் திமுக தலைமைக்கு அனுப்பினர். அதில் திண்டிவனம் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருக்கிறார். நகராட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
Gingee Masthan
இவர்கள் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுத்தது, பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியது. மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக, விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுவதும் செஞ்சி மஸ்தானின் குடும்ப ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தலைமைக்குப் புகார்களும் பறந்தன.
Gingee Masthan
இதனால், செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் மக்களவை தேர்தல் நேரத்தில் செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்தால் தேவையில்லாமல் சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் தேர்தல் முடிந்த நிலையில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
KS Masthan
மேலும் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சர் மஸ்தான் தான், அவரையும் மாற்றிவிட்டால் முஸ்லிம் இல்லாத ஸ்டாலின் அமைச்சரவை என்ற விமர்சனங்கள் எழும். எனவே அமைச்சரவைளில் இருந்து மாற்றப்படவில்லை என கூறப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் பஞ்சத்தில் மீண்டும் நாசருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.