விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்க அச்சாரம் போடுகிறாரா நடிகர் பிரஷாந்த்? சந்தேகத்தை ஏற்படுத்திய செயல்கள்!
ஏற்கனவே தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், அவரை தொடர்ந்து... நடிகர் பிரஷாந்தும் அரசியக்குக்கு அச்சாரம் போட்டு வருகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜனின் மகனான பிரஷாந்த், 1990- ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், கிழக்கே வரும் பாட்டு, ராசா மகன், கண்மணி உள்ளிட்ட பல காதல் படங்களில் நடித்தார்.
விஜய் - அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் வெற்றிக்காக போராடி கொண்டிருந்த காலகட்டத்தில் அசால்டாக காதல் படங்கள் மூலம் தன்னுடைய அடுத்தடுத்த வெற்றியை கொடுத்தவர் பிரஷாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால், 2002 ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறேன் திரைப்படம் தான். இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்த போதிலும்... இது வரை ஒரு வெற்றி படத்தை கூட கொடுக்கமுடியாமல் போனது.
இவரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளும் இவர் பல பட வாய்ப்புகளை நிராகரிக்க காரணமாக மாறியது. நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ள நிலையில், அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து 'கோட்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
திரையுலகில் பிரஷாந்த் மிகவும் பின் தங்கியுள்ள நிலையில், தற்போது அவர் அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு நடிகர் பிரசாந்த் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து, பாளையங்கோட்டையில், வாகன ஓட்டிகள் 50 பேருக்கு நடிகர் பிரசாந்த் தலைகவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுவதால்... விபத்தில் சிக்கி பல மரணங்கள் ஏற்படுவதாகவும், இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்தினார்.
Varun: என் கனவு நிறைவேறி விட்டது! 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் குறித்து மெய் சிலிர்த்து பேசிய வருண்!
GOAT
இப்படி தன்னுடைய மன்றத்தின் மூலம் பிரஷாந்த் உதவிகள் செய்து வருவது... அரசியல் நோக்கத்துடனா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள் . விஜய்யுடன் படத்தில் ஒன்று சேர்ந்த பிரஷாந்த், அரசியலிலும் ஒன்று சேர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.