Madhubala: 'ரோஜா' படத்திற்கு பின் மதுபாலாவுக்கு வாய்ப்பு கொடுக்காத மணிரத்னம்! காரணம் இந்த கெட்ட பழக்கம் தானாம்
நடிகை மதுபாலா முதல் முறையாக 'ரோஜா' படத்திற்கு பின்னர் ஏன் மணிரத்னம் தனக்கு வாய்ப்பு கொடுக்காவில்லை என்பது பற்றி பேசியுள்ளார்.
54 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் இருக்கும் நடிகை மதுபாலா, முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் 'ரோஜா' படத்திற்கு பின் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது பற்றி பேசியுள்ளார்.
90களில் முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் மதுபாலா. 1991 ஆம் ஆண்டு, 'அழகன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இதைத் தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானார்.
இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று 'ரோஜா'. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் ஸ்பெஷல் விருதை பெற்றார். மேலும் ஃபிலிம் ஃபேர் விருதுக்கும் நாமினேட் செய்யப்பட்டார்.
பொதுவாக இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய இயக்கத்தில், நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பை கொடுப்பவர். ஆனால் மதுபாலாவுக்கு மட்டும் அது போன்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது. 'இருவர்' படத்தில் கூட ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடும் வாய்ப்பை கொடுத்தார்.
Varun: என் கனவு நிறைவேறி விட்டது! 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் குறித்து மெய் சிலிர்த்து பேசிய வருண்!
இந்நிலையில் மதுபாலா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். "இயக்குனர் மணிரத்தினம் வாய்ப்பு தனக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு காரணம் என்னுடைய தவறுதான் .என்னுடைய ஆட்டிடியூட் தான் காரணம். பொதுவாகவே அவர் தன்னுடைய படத்தை பணியாற்றும் அனைவரிடமும் தொடர்பில் இருப்பவர். நான் அவருடன் டச்சில் இல்லை, அதன் காரணமாகவே எனக்கு வாய்ப்பு தரவில்லை. அதோடு எனக்கு குடிப்பழக்கம் இருந்ததால், நானும் பெரிதாக எந்த படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபாலா தமிழில் நடித்த ஜென்டில்மேன், செந்தமிழ் செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். குறிப்பிடத்தக்கது திருமணம் ஆகிய பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்' என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த மதுபாலா, தற்போது குணச்சித்திர வேடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.200 கோடி சொத்து.. ஆடம்பர வீடுகள்.. பிரைவேட் ஜெட்.. தென்னிந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்..!