இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் இவர்தான்.. அது ஸ்ரேயா கோஷல், அரிஜித் இல்லை.. யார் தெரியுமா?
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். அது அரிஜித், தில்ஜித், ஸ்ரேயா கோஷல், சுனிதி, சோனு ஆகியோர் கிடையாது.
India's Highest Paid Singer
60களில் பின்னணிப் பாடகர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினர். நாளடைவில் காலம் முன்னேற, அதற்கேற்றவாறு சம்பளம் உயர்ந்து கொண்டே போனது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான பாடகர்கள் ஒரு பாடலுக்கு லட்சங்களில் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
Highest Paid Singer
அதுவும் முழு ஆல்பத்திற்கும். ஆனால் அவர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ஒரு முழுநேர பாடகர் கூட இல்லை. அவர் ஒரு இசையமைப்பாளர் ஆவார். அந்த இசையமைப்பாளர் வேறு யாருமில்லை, ஏ.ஆர் ரஹ்மான் தான் அவர். தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஆவார்.
AR Rahman
இது இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் மற்ற பாடகர்களை விட பல மடங்கு அதிகம். பெரும்பாலும், ரஹ்மான் தனது சொந்தப் பாடல்களைப் பாடுவார், மிக அரிதாகவே வேறொருவர் இசையமைத்த பாடலுக்குக் குரல் கொடுப்பார். ஏ.ஆர் ரஹ்மான் சொத்து மதிப்பு 1728 கோடி என்று கூறப்படுகிறது.
AR Rahman Net Worth
ரஹ்மானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகி ஸ்ரேயா கோஷல். ஒரு பாடலுக்கு ரூ. 25 லட்சம் வரை வசூலிக்கிறார். அவரைத் தொடர்ந்து அரிஜித் சிங்குடன் அவரது தோழியும் போட்டியாளருமான சுனிதி சௌஹான், இருவரும் ஒரு பாடலுக்கு ரூ. 18-20 லட்சம் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
AR Rahman Assets
ஷான் மற்றும் சோனு நிகம் இருவரும் ஒரு பாடலுக்கு ரூ. 15-18 லட்சம் கட்டணத்துடன் பட்டியலில் அடுத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளனர். தில்ஜித் தோசன்ஜ், பாட்ஷா, மிகா மற்றும் நேஹா கக்கர் உட்பட பல பாடகர்கள் ஒரு பாடலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வசூலிக்கின்றனர்.
உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..