நண்பனின் மனைவியை மடக்கி உல்லாசம்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் பழனிவேல் கொலை.. ரசித்த செல்வி!
கள்ளக்காதலுக்காக தாலி கட்டிய கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Namakkal Crime News
நாமக்கல் மாவட்டம் நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2-ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Police Investigation
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பழனிவேலின் அக்காள் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பழனிவேலின் மனைவி செல்வி பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். இதனையடுத்து போலீசார் செல்வியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் உல்லாசம்! வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி இதுபோல சந்தோசம் கொடுக்க முடியுமா கேட்ட கணவர்!
illegal Love
அப்போது செல்வி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். எனது கணவருக்கும், கள்ளக்காதலனான ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் நண்பர்கள். அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு வந்து சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்ததும் மட்டுமல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால், அவரை செய்ய திட்டமிட்டோம்.
Wife Arrest
அதன்படி நானும், கள்ளக்காதலன் கந்தசாமி, சேலத்தை சேர்ந்த கூலிப்படை ரவி ஆகிய 3 பேரும் சேர்ந்து மது கொடுத்து பழனிவேலை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் செல்வி, ரவி ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கந்தசாமியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!