சென்னையில் ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. விடுதியில் இறந்து கிடந்த இரண்டு ஐடி ஊழியர்கள்.. நடந்தது என்ன?
சென்னை தனியார் விடுதியில் நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளைஞர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IT Employee
சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ் (25). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் லோகேஷின் பெற்றோர் அமைந்தகரையிலும், வாஞ்சிநாதன் பெற்றோர் அம்பத்தூர் போலீசிலும் புகார் அளித்தனர்.
Chennai Police
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே வாஞ்சிநாதன் தனது சகோதரி காமாட்சிக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். செல்போன் நம்பரை வைத்து எந்த டவர் என்று ஆய்வு செய்த போது சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியை காட்டியது.
இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!
Chennai Crime News
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாஞ்சிநாதன் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு லோகேஷ் இறந்த நிலையில் தரையிலும், வாஞ்சிநாதன் தூக்கிட்ட நிலையிலும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையும் படிங்க;- மகள்களுடன் வசமாக சிக்கிய அம்மாக்கள்.! கொட்டி கிடந்த ஆபாச வீடியோக்கள்.! ஆசிரியரின் காம லீலைகள் அம்பலம்.!
Homosexuality
லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் கடந்த சில மாதங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற இருவரும், பின்னர் முகப்பேரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் பயத்தில் வாஞ்சிநாதனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.